அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே… பிரம்மாண்ட சொகுசு வீட்டை விற்ற நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவர்!

நடிகை ஐஸ்வர்யா ராய் கணவரும், பிரபல நடிகருமான அபிஷேக் பச்சன் தனது பிரம்மாண்ட சொகுசு வீட்டை ரூ 45 கோடிக்கு விற்றுள்ளார்.

மும்பையில் 2014ம் ஆண்டு வாங்கிய சுமார் 7000 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை தான் அபிஷேக் சில தினங்களுக்கு முன்பு விற்றுள்ளார் என பாலிவுட் வெப்சைட்டுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பையில் வொர்லி பகுதியில் ஓபராய் 360 மேற்கு என்ற பெயரில் டவர் ஏ, டவர் பி என்ற இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் 2011ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டது. டவர் ஏ என்பது 52 மாடிகளைக் கொண்ட லக்சுரி ஹோட்டல். டவர் பி என்பது 90 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு.

இதன் உயரம் 360 மீட்டர் என்பதால் தான் குடியிருப்பிற்கு ஓபராய் 360 மேற்கு எனப் பெயரிட்டார்கள். அரபிக்கடலை நோக்கி மேற்குப் பக்கம் பார்த்தபடி அனைத்து வாசற்படிகளும் இருக்குமாம்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால் இந்தியாவிலேயே உயரமான கட்டிடம் எனப் பெயர் பெறும். இந்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டவர் பி கட்டிடத்தின் 32வது மாடியில் 4 கார் பார்க்கிங் வசதியுடன் 2014ம் ஆண்டு 41 கோடி ரூபாய்க்கு வாங்கிய குடியிருப்பை அபிஷேக் பச்சன் தற்போது 45 கோடிக்கு விற்றுள்ளதாக பாலிவுட் வெப்சைட்டுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் விற்றதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button