ஆரோக்கியம் குறிப்புகள்

வீடு முழுக்க கொசு தொல்லையா? விரட்டி அடிக்க இதோ அற்புதமான எளிய தீர்வு

இரவில் தூங்கும் போது சில இடங்களில் கொசுத்தொல்லை (Mosquito) அதிகமாக இருப்பதுண்டு.

பூண்டை தலையணையின் கீழ் வைத்திருப்பதால் நாம் எளிதாக கொசுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

மேலும், பூண்டில் இருக்கும் பல கூறுகள் கொசுக்கள் மற்றும் பல பூச்சிகளுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன.

ஆகையால் தலையணையின் கீழ் பூண்டை வைத்துக்கொண்டால், கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகள் அந்த வாசனையால் விலகி ஓடிவிடும்.

 

அடுத்ததாக, தலையணையின் கீழ் பூண்டை வைத்திருப்பது உடலில் உறக்கத்தைத் (Sleep) தூண்டுகிறது.

பூண்டில் வைட்டமின் பி 1 உள்ளது. இது மனிதர்களுக்கு நல்ல தூக்கத்தை அளிகிறது. இது தவிர, வைட்டமின் பி 6-ம் பூண்டில் உள்ளது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இது தூக்கமின்மையால் அவதுப்படுவோருக்கு அதிக நன்மை பயக்கும். பொதுவாக மனிதர்களுக்கு ஒரு நாளில் 7 மணிநேர தூக்கம் தேவை என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தூக்கமின்மை பல கடுமையான நோய்களுக்கும் மன பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், தலையணையின் கீழ் பூண்டு வைத்திருப்பதன் மூலம், இந்த நோய்கள் அனைத்தையும் நீங்கள் தவிர்க்கலாம். தினமும் தலையணையின் கீழ் பூண்டு (Garlic) வைத்திருப்பது ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பூண்டில் அல்லிசின் எனப்படும் ஒரு கூறு காணப்படுகிறது. மூக்கில் ஏற்படும் அடைப்பு மிகப் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், இது கவனிக்கப்படாவிட்டால், அது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் தலையணைக்கு கீழ் பூண்டு பற்களை வைத்துக்கொண்டு தூங்கினால், பூண்டில் உள்ள அல்லிசினின் காரணமாக, மூக்கில் எந்தவிதமான தொற்றுநோயும் ஏற்படாமல் இர்க்கும். மூக்கில் உள்ள அடைப்பும் சரியாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button