அழகு குறிப்புகள்

விடிய விடிய தீ மூட்டவிட்ட பிக்பாஸ்! அண்ணாச்சியை பழி தீர்த்த இசைவாணி…

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஊரு விட்டு ஊரு வந்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸ் கிராமத்தினர் மற்றும் நகரத்தினர் என குழுக்களாக உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நெருப்பின் ஆளுமை கொடுக்கப்பட்டுள்ளதால் அந்த காயினை வைத்துள்ள இசைவாணியே எல்லா போட்டிகளுக்கும் நடுவராக இருந்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று தொடக்கத்தில் ஊரு விட்டு வந்த டாஸ்க்கில் குறைவான ஈடுபாட்டுடன் பங்கேற்ற போட்டியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்யுமா அந்தந்த அணி தலைவர்களுக்கு அறிவுறுத்தினார் பிக்பாஸ்.

 

இதனை தொடர்ந்து வருண் மற்றும் அபினய் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களை கார்டன் ஏரியாவில் தூங்காமல் தீ மூட்டி அணைய விடாமல் விடிய விடிய பாதுகாக்க வேண்டும் என்று கூறினார் பிக்பாஸ்.

மேலும் இருவரையும் தூங்க விடாமல் கண்காணிக்கும் பணியை இசைவாணி யாரையாவது வைத்து மேற்கொள்ளலாம் என்றும் கூறினார் பிக்பாஸ்.

 

உடனடியாக அண்ணாச்சியை கண்காணிக்குமாறு கூறி பழி தீர்த்துக் கொண்டார் இசைவாணி.

ஏற்கனவே இசைவாணிக்கும் அண்ணாச்சிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. நேற்றைய எபிசோடில் இசைவாணியின் நடவடிக்கை சர்வாதிகாரி போன்று இருப்பதாக கூறினார் அண்ணாச்சி.

இதனால் பலி தீர்க்கவே இப்படி செய்திருப்பார் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button