ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த நேரத்தில் கனவு கண்டால் மிகவும் ஜாக்கிரதை….தெரிஞ்சிக்கங்க…

நம்முடைய வாழ்க்கையே ஒரு கனவு தான். ஆனால் நாம் ஒவ்வொருநாளும் தூங்கும் போதும் சில கனவுகள் வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும். அப்படி நாம் காணும் கனவுக்கு பலன்கள் உள்ளது.

எந்த மாதிரியான கனவு கண்டால் தீமைகள் நடக்க போகின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.

 

கனவு காணும் நேரம் மற்றும் பலன்   

  1. மாலை 6 – 8.24 மணி – ஒரு வருடத்திலும்
  2. இரவு 8.24 – 10.48 மணி – 3 மாதத்திலும்
  3. இரவு10.48 – 1.12 மணி – 1 மாதத்திலும்
  4. இரவு1.12 – 3.36 மணி – கனவு 10 தினங்களிலும்
  5. விடியக்காலை 3.36 – 6.00 மணி உடனடியாக பலிக்கும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

 

தீய பலன் தரும் கனவுகள்

  1.  பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் நஷ்டம் ஏற்படும்.
  2. இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
  3. தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும்,குடும்பம் பிரியும்.
  4. காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.
  5. எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
  6. எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
  7. புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
  8. பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
  9. பசு விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு, வியாதி சூழும்.
  10. முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை ஏற்படும்.
  11. குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும்,செல்வாக்கு சரியும்.
  12. நோய் பிடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
  13. ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
  14. முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
  15. சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button