மருத்துவ குறிப்பு

பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்

உடலில் ரத்தத்தின் அளவு குறைவதால், உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படும். பெரும்பாலும் சோர்வு, பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் குறைந்த ஹீமோகுளோபினின் அறிகுறிகளாகும்.

இரத்த பற்றாக்குறை காரணமாக, நீங்கள் இரத்த சோகைக்கு ஆளாகலாம். இந்தப் பிரச்சனை பெண்களுக்குத்தான் பெரும்பாலும் அதிகம் ஏற்படுகின்றது. ஹீமோகுளோபினின் உடலில் ஆக்ஸிஜனை வழங்கும் பணியை செய்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், பல வகையான மன மற்றும் உடல் பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடலாம்.

இதைத் தவிர்க்க, பீட்ரூட், மாதுளை மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள். இது மட்டுமல்ல இரத்த சோகையை வெல்லமும் போக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வெல்லம் உடலில் இரத்தத்தை பெருக்குகிறது என்பதை மிகச் சிலரே அறிவார்கள். எனவே ரத்த வெல்லம் மூலம் எப்படிப் போக்கலாம் என்பதை விரிவாகத் தெரிந்து கொள்வோம். இது தவிர, அதன் மற்ற நன்மைகள் என்ன என்பதையும் அறியலாம்.
dfhhj
வெல்லம் சாப்பிட்டால் ரத்தம் பெருகுமா?

வெல்லம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது என்று பல அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே இருக்கும் ரத்தத்தையும் சுத்திகரிக்கும். வெல்லத்தில் வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-பி, சுக்ரோஸ், குளுக்கோஸ், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம் கூறுகள் உள்ளன. இதனுடன், பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இரத்தத்தை அதிகரிக்க உதவுகின்றன.

வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் மற்ற நன்மைகள்

1. வெல்லம் உடலில் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதைத் தவிர, ஜீரண சக்தியை பலப்படுத்துகிறது. அதாவது வெல்லம் வயிற்று பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்தும்.

2. இது தவிர, வெல்லம் எடையைக் கட்டுப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தேநீரில் வெல்லத்தையும் பயன்படுத்தலாம்.

3. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் வெல்லம் நன்மை பயக்கும்.

4. மாதவிடாய் வலி அதிகமாக இருந்தால், கண்டிப்பாக வெல்லம் சாப்பிட வேண்டும். இதனால் வலியைக் குறைக்கலாம்.

5. மூட்டு வலிக்கும் வெல்லம் சாப்பிடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button