ஆரோக்கியம் குறிப்புகள்

கோடை வெயிலில் உங்க கண்களில் என்ன பிரச்சனை ஏற்படும்?

அந்தந்த பருவநிலைக்கு ஏற்ப நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், கோடைகாலம் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் நலப் பிரச்சனை, சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனைகள் ஏற்படும். அதோடு கண் பிரச்சனைகளும் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், கார்னியா எரிதல், வறண்ட கண், சோர்வான கண்கள், வலி​​மற்றும் ஒவ்வாமை ஆகியவை கோடைக் காலத்தின் பொதுவான கண் பிரச்சினைகளில் சில. மக்கள் வெயிலைப் பற்றி நினைக்கும் போது,​​​​பெரும்பாலும் கவனம் செலுத்துவது தோலின் மீது தான் ஆனால், அதிகப்படியான தாக்கம் மற்றும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் உங்கள் கண்களில் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

எனவே, சூரிய ஒளி மற்றும் அதிக வெப்பத்தின் நேரடி வெளிப்பாடு காரணமாக நம் கண்களின் கண்ணீர் படலம் ஆவியாகிவிடுவதால், கோடையில் கண் பராமரிப்பு முறையை கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான கண்களுக்கு பின்பற்ற வேண்டிய சில அத்தியாவசிய கண் பராமரிப்பு குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளியில் செல்லும் போது சன்கிளாஸ்களை அணியுங்கள்
வெளியில் செல்லும் போது சன்கிளாஸ்களை அணியுங்கள்
சன்ஸ்கிரீன்கள் சருமத்திற்கு இன்றியமையாதது போல, கண்களுக்கு சன்கிளாஸும் அவசியம். கோடை வெயிலில் நீங்கள் வெளியே செல்லும்போது,​​உங்கள் கண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்பதால், சன்கிளாஸை நீங்கள் தாராளமாக வாங்கலாம். சேதப்படுத்தும் புற ஊதாக் கதிர்களில் இருந்து கார்னியா எரிக்கப்படுவதிலிருந்து கண்களை சன்கிளாஸ் நிழல்கள் பாதுகாக்கின்றன. கார்னியா எரிவதற்கான சில முக்கிய அறிகுறிகள் வறட்சி, அசௌகரியம் ஆகியவை ஆகும்.

நீரேற்றமாக இருங்கள்

நீரேற்றமாக இருப்பது உங்கள் ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியத்தை வழங்குகிறது. ஆம், உங்கள் சிறந்த கண் ஆரோக்கியத்திற்கு நல்ல அளவு திரவங்களை உட்கொள்வது அவசியம். கோடையில் நம் கண்களின் கண்ணீர்ப் படலம் அடிக்கடி ஆவியாகிவிடுவதால், அதிக தண்ணீர் குடிப்பதால், உங்கள் உடல் ஆரோக்கியமான அளவு கண்ணீரை உற்பத்தி செய்ய உதவும். ஆனால் ஒருவர் மது மற்றும் காஃபின் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.

கண் சொட்டுகளால் உங்கள் கண்களை உயவூட்டுங்கள்
கண் சொட்டுகளால் உங்கள் கண்களை உயவூட்டுங்கள்
சில நேரங்களில், மீதமுள்ள நீரேற்றம் போதுமானதாக இருக்காது. ஆதலால், ஒரு கண் சொட்டு மருந்தை (ஒரு கண் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு) ஒருவர் எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் கோடைக் காலம் கண் வறட்சி மற்றும் எரிச்சலுக்கு வழி வகுக்கும். இது பெரும்பாலும் கண்களில் வலி அல்லது வீக்கம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். இந்த பிரச்சனை சரியாக, மருத்துவரின் ஆலோசனை பேரில் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. இது கண்களை உயவூட்டுகிறது. மேலும், வலி மற்றும் வறட்சியை நீக்குகிறது.

முகத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்
முகத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்
கோடைக்காலத்தில் சூரிய ஒளியில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க முகத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துதல் அவசியம். ஆனால் அதை உங்கள் கண்கள் மற்றும் கண் இமை பகுதிக்கு அருகில் மற்றும் சுற்றி பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். எஸ் பி எஃப் அதிகம் உள்ள சன்ஸ்கிரீன்கள், தவறுதலாக உள்ளே சென்றால் பொதுவாக கண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இது நிரந்தர கண் பாதிப்புக்கு வழிவகுக்காது என்றாலும், இது கண்களின் மேற்பரப்பில் இரசாயன எரிப்பை ஏற்படுத்தும். சில நாட்களுக்கு இது கொஞ்சம் அசௌகரியமாகவும் வலியாகவும் உங்களுக்கு இருக்கும்.

மதிய வெயிலைத் தவிர்க்கவும்

அவசியமில்லை என்றால், பிற்பகலின் பிற்பகுதியில் வெயிலில் வெளியே செல்வதை கட்டுப்படுத்துங்கள். சூரியன் பிரகாசமாக பிரகாசிக்கும் மற்றும் புற ஊதா கதிர்கள் உச்சத்தில் இருக்கும் நேரம் இது. ஆபத்தான புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் கண்களைப் பாதுகாப்பது உகந்த கண் ஆரோக்கியத்திற்கும் உங்கள் பார்வையை பராமரிப்பதற்கும் அவசியம். ஆதலால், அவசியமில்லாமல் மதிய வேளையில் வெளியே செல்வதை தவிருங்கள்.

கண் பாதுகாப்பு கிளாஸ் அணியுங்கள்

புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாப்பதைத் தவிர, நீச்சல், தோட்டம் வெட்டுதல் அல்லது வெளியில் மரவேலை செய்வது போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கண் பாதுகாப்பு கிளாஸ் அணிய வேண்டும். உங்கள் கண்கள் மற்றும் முகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்க கண்ணாடி, ஹெல்மெட் அல்லது கேடயங்கள் அல்லது முகக் கவசங்கள் போன்ற பாதுகாப்பை அணிவதை உறுதிசெய்யவும். கோடைகால கண் பிரச்சனைகளைத் தடுக்க, கண் பராமரிப்புக்கு ஒரு முன்முயற்சியான அணுகுமுறையை எடுக்க வேண்டும். வழக்கமான இடைவெளியில் உங்கள் கண் மருத்துவரை சந்திக்க மறக்காதீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button