மருத்துவ குறிப்பு

இதயநோய்க்கு குட்பை சொல்லனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஒரு உணவு பொருளாகும்.

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை
காலையில் வெறும் வயிற்றில் சில பல கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றில் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையை பெறலாம்.

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் இதயநோய்க்கு குட்பை சொல்லனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

இதயத்திற்கு ஆரோக்கியம்
வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது. குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு. கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது.

ரத்தசோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்தசோகை நீங்கும்.

கறிவேப்பிலை இதய நோய், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினையில் இருந்தும் பாதுகாப்பு தரும்.

வாழ்நாள் முழுவதும் இதயநோய்க்கு குட்பை சொல்லனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

கறிவேப்பிலையை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
இந்த கறிவேப்பிலை பெரும்பாலான வீடுகளில் தாளிக்கறதுக்கும் நறுமணத்துக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால் இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

கருவேப்பிலையை மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து பொடியாக வைத்துக்கொண்டால், சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.

கறிவேப்பிலையை, புளி, மிளகாய், உப்பு வைத்து அரைத்து துவையலாகவம் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு சாப்பிடுவதால் பசியை தூண்டுவதுடன், பித்தவாந்தி சரியாகவும் செய்கின்றது.

கறிவேப்பிலை இலை, வேர், பட்டை என இவை மூன்றிலும் மருத்துவ குணம் அதிகமாக உள்ளதால், இவறறினை தண்ணீரில் ஊறவைத்து குடித்துவந்தால், வயிற்றுவலி குணமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button