மருத்துவ குறிப்பு

திருமணத்திற்கு முன் உங்கள் துணையின் இரத்த வகையை ஏன் கேட்க வேண்டும் தெரியுமா?

நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளீர்களா? உங்கள் வருங்கால வாழ்க்கை துணையை பற்றி நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா?அவருடன் டேட்டிங் செய்யப் போகிறீர்களா? மகிழ்ச்சி ஆனால் நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த பிறகு ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துணையின் குணங்கள், குணாதிசயங்கள் மற்றும் ஒருவருக்கொருவர் பொருந்தக்கூடிய தன்மை ஆகியவற்றை நீங்கள் மதிப்பது போல், உங்கள் துணையின் ஆரோக்கியத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆம், திருமணம் செய்துகொள்ளும் இருவரும் இந்த உலகத்தில் புதிய வாழ்க்கையை சுவாசிப்பார்கள். ஆனால் தற்போது பல தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் எந்த பெற்றோரும் தங்கள் குழந்தை பெற்றெடுத்த பிறகு கஷ்டப்படுவதை விரும்பவில்லை. உண்மையில், தங்கள் குழந்தைகள் எந்த வலியையும் உணரக்கூடாது என்று பலர் நம்புகிறார்கள். அப்படியானால், இரண்டு குறிப்பிட்ட ரத்த வகைகளைக் கொண்ட பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் சில உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ABO மற்றும் Rh இரத்த வகை
இரத்த வகைகளில் ABO மற்றும் Rh இரத்த வகை பற்றி கேட்டிருப்பீர்கள். ABO என்பது பல்வேறு வகையான இரத்தக் குழுக்களைக் குறிக்கிறது: A, B, O மற்றும் AB. அதே சமயம் Rh என்பது ஒரு வகையாக புரதம். இது இரத்த சிவப்பணுக்களில் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அதில் இரத்த சிவப்பணுக்களில் Rh புரதம் இருந்தால், அது Rh பாசிட்டிவ் என்றும், புரதம் இல்லாவிட்டால், அது Rh நெகட்டிவ் என்றும் அழைப்பார்கள். Rh பாசிட்டிவ் மிகவும் பொதுவான இரத்த வகை. ஆனால் Rh நெகட்டிவ் ஆரோக்கியத்தைப் பாதிக்காது, ஆனால் உங்கள் கர்ப்பத்தைப் பாதிக்கும். எனவே தான் திருமணத்திற்கு முன் அல்லது குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன், தங்களின் Rh ஐ சரிபார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

Rh இரத்த வகையைக் கொண்ட தம்பதிகள்

நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும், Rh பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் ஆக இருந்தால், அதில் பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால் தாய் Rh நெகட்டிவ்வாகவும், தந்தை Rh பாசிட்டிவ்வாகவும் இருக்கும் போது, பிறக்கும் குழந்தை Rh பாசிட்டிவ்வாகத் தான் இருக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில், அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் பல சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளன.

தம்பதிகளின் பொருந்தமில்லாத இரத்த வகைகள் ஐசோஇம்யூனைசேஷனுக்கு வழிவகுக்கும்[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஒரு Rh நெகட்டிவ் தாய் மற்றும் Rh பாசிட்டிவ் தந்தையிடம் இருந்து உருவாகும் Rh பாசிட்டிவ் குழந்தை, ஐசோஇம்யூனைசேஷன் என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறைக்கு வழிவகுக்கும். இது நிகழும் போது, குழந்தை கருப்பையில் இருக்கும் போது, குழந்தையின் இரத்தம் தாயின் உடலில் நுழையக்கூடும். இது கர்ப்பத்திற்கு பின் ஏற்படும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஒருவேளை தாய் குழந்தையை கலைத்தாலும், Rh பாசிட்டிவ் தந்தையின் இரத்தம் கலந்தாலும், இந்த ஆபத்து நிகழும்.

ஆகவே தான் Rh நெகட்டிவ் தாய் மற்றும் Rh பாசிட்டிவ் தந்தையாக இருப்பவர்கள் ஒரு Rh பாசிட்டிவ் குழந்தையைத் தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தம்பதியரின் இரத்த வகைகள் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது?

Rh நெகட்டிவ் தாய் மற்றும் Rh பாசிட்டிவ் தந்தை கொண்ட தம்பதிகளுக்கு, ஆன்டி-டி ஊசி சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஊசி தந்தையின் Rh பாசிட்டிவ் இரத்தத்திற்கு தாயின் இரத்தம் வெளிப்படும் போது ஆன்டிபாடிகள் உருவாவதைத் தடுக்கிறது. இந்த ஆன்டிபாடிகள் குழந்தைக்கு மஞ்சள் காமாலை மற்றும் இரத்த சோகை போன்ற நோய்களால் அவஸ்தைப்பட செய்யும். ஆனால் இந்த ஊசி, தம்பதியினர் தங்கள் குடும்ப திட்டத்தை பாதுகாப்பாக முன்னேற அனுமதிக்கும்.

எனவே தான் மருத்துவர்கள் எப்போதும் பெற்றோராகும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் இரத்த வகையைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். அதே சமயம் தம்பதிகள் வேறு சில இரத்த பரிசோதனைகளையும் கட்டாயம் செய்ய வேண்டும்.

HIV மற்றும் STDs

HIV மற்றும் STDs போன்ற நோய்கள் மிகவும் மோசமான தொற்றுநோயாகும். இத்தகைய தொற்று இருக்கிறதா என்பதை தம்பதிகள் அறிந்து கொள்வதால், கொடிய தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க உதவும்.

தலசீமியா சோதனை

நீங்கள் இரத்த பரிசோதனைக்கு செல்லும் போது, தலசீமியாவிற்கும் பரிசோதனை செய்யுங்கள். இந்த சோதனையால் பிறப்பு குறைபாட்டின் அபாயத்தைத் தடுக்கலாம். ஒரு தலசீமியா நோயாளியின் உடலில் குறைவான ஹீமோகுளோபின் மற்றும் சிறிய அளவிலான இரத்த சிவப்பணுக்கள் அதிகளவில் இருக்கும். இந்நிலை பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

உதாரணமாக, இரண்டு தலசீமியா மைனர் நோயாளிகள், ஒரு தலசீமியா குழந்தையைப் பெற்றெடுப்பார்கள். இந்த குழந்தை ஒவ்வொரு மாதமும் உயிர் வாழ்வதற்கு இரத்தமாற்றம் தேவைப்படும். இது மிகவும் விலையுயர்ந்த பணியாக இருப்பதுடன், குழந்தை வாழ்நாள் முழுவதும் உயிர் வாழ்வதற்கான கஷ்டப்பட வேண்டியிருக்கும். எனவே தான் தலசீமியா மைனர் பெற்றோர்கள் பிரசவத்தைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கருவுறுதல் சோதனை

இந்த சோதனை முற்றிலும் தம்பதிகளின் விருப்பம். நீங்கள் திருமணத்திற்கு பிறகு குழந்தைக்கு திட்டமிட விரும்பினால், கருவுறுதல் சோதனைக்கு செல்லலாம். இந்த கருவுறுதல் சோதனையில் விந்து பகுப்பாய்வு முதல் ஹார்மோன் பகுப்பாய்வு மற்றும் அல்ட்ராசவுண்ட் ஆகியவை அடங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button