அழகு குறிப்புகள்

சனி வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் தன லாபம்!

சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதைக் காண்போம்.

உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சனி வக்ர நிவர்த்தியால் இன்னும் 3 நாட்களில் காத்திருக்கும் திடீர் மாற்றம்…இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் தன லாபம்! | 23 October 2022 These Zodiac Signs

மேஷம்
சனி வக்ர நிவர்த்தி அடைவதால் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறவுள்ளார்கள். ஏன் திடீர் லாபம் கூட கிடைக்கும். பணிபுரியும் சிலர் நல்ல சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியானது நல்ல பலன்களை வழங்கப் போகிறது. மேலும் இந்த ராசிக்கு அஷ்டம சனி நடக்கிறது. இருப்பினும், தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வழிகளில் இருந்து பண ஆதாயம் கிடைக்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனி வக்ர நிவர்த்திக்கு பிறகான காலம் யோகமான காலமாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது அல்லது உங்கள் வேலைகளை மாற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.

இக்காலத்தில் உங்களின் வெற்றிக்கு உங்கள் வாழ்க்கைத் துணை முக்கிய காரணமாக இருப்பார்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடக்கிறது. முக்கியமாக துலாம் ராசி சனி பகவானின் விருப்பமான ராசியாகும். எனவே சனி வக்ர நிவர்த்தி அடைவதால் சிலருக்கு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் ஆசை இக்காலத்தில் நிறைவேறும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். இருப்பினும் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

மகரம்
சனி பகவான் தனது சொந்த ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். மேலும் மகர ராசிக்கார்களுக்கு ஏழரை சனியும் நடக்கிறது.

இருப்பினும், சனி வக்ர நிவர்த்திக்கு பின் மகர ராசிக்காரர்கள் நற்பலனகளைப் பெறுவார்கள். இதுவரை கவலைப்பட்டு வந்த விஷயங்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். எப்பேற்பட்ட பிரச்சனையையும் எளிதில் தீர்ப்பீர்கள். ஆனால் உங்கள் கடின உழைப்பை குறைத்துவிடாதீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button