ஆரோக்கியம் குறிப்புகள்

காலையில் பல் துலக்காமல் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சனை என்ன தெரியுமா?

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் சூடான தேநீர் பலருக்கு மகிழ்ச்சியான தொடக்கமாகும். டீ குடிக்காமல் இருப்பது உங்கள் மனநிலையை கெடுத்துவிடும். அந்த வகையில், டீ அதன் சுவையால் பலரையும் கவர்ந்துள்ளது. இவ்வுலகில் காபி பிரியர்கள் அதிகம் இருப்பது போல் தேநீர் பிரியர்களும் அதிகம். தேநீர் பிரியர்களுக்கு தவிர்க்க முடியாத பல வகையான தேநீர் வகைகள் உள்ளன.

பெரும்பாலான மக்கள் தேநீர் குடிக்க விரும்புகிறார்கள். ஆனால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிப்பதும் உடல் நலத்தைக் கெடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? டீயில் காஃபின் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் தீங்கு விளைவிக்கும். நீங்கள் காலையில் எழுந்து தேநீர் அருந்தினால், தேநீர் உங்களுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிய இந்த கட்டுரையைப் படியுங்கள்.

அசிடிட்டி
ஒருவர் காலையில் எழுந்தவுடனேயே வெறும் வயிற்றில் டீயை குடித்தால் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அசிடிட்டி. ஆம், வெறும் வயிற்றில் டீ குடிக்கும் போது, இரைப்பையில் அமிலம் அதிகம் சுரக்கப்பட்டு அசிடிட்டி பிரச்சனையை உண்டாக்கும் மற்றும் இது உடலில் செரிமான அமிலத்தையும் பாதிக்கும்.

பலவீனமான செரிமான மண்டலம்

தினமும் வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால், செரிமான மண்டலம் படிப்படியாக பலவீனமாகும் சில சமயங்களில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நீண்ட காலமாக வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால், அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

பசியின்மை

வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால், அது பசியுணர்வை பாதிக்கும். மேலும் அளவுக்கு அதிகமாக டீ குடித்தால் பசியுணர்வு முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். சிலர் ஒரு நாளில் பல முறை டீ குடிப்பார்கள். அத்தகையவர்களின் உண்ணும் உணவின் அளவைப் பார்த்தால் மிகக்குறைவாகவே இருக்கும். உண்ணும் உணவின் அளவு குறையும் போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட தொடங்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வயிற்று எரிச்சல் மற்றும் வாந்தி

கோடைக்காலத்தில் பலரும் வயிற்று எரிச்சல் அல்லது வாந்தி போன்ற பிரச்சனைகளை சந்திப்பதுண்டு. இதற்கு ஓர் காரணம் வெறும் வயிற்றில் டீ குடிப்பது தான். டீயை வெறும் வயிற்றில் குடிப்பது வயிற்று எரிச்சல், வாந்தி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும். ஆகவே கோடையில் குடிக்கும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது.

தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம்

வெறும் வயிற்றில் டீ குடிப்பது தூக்கத்தை இழக்க வழிவகுக்கும். இப்படியே ஒருவர் நீண்ட காலமாக தூங்கும் நேரத்தில் டீ குடித்து வந்தால், பின் அது சரியான தூக்கம் கிடைக்காமல் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

இரத்த சர்க்கரை அதிகரிக்கும்

முக்கியமாக வெறும் வயிற்றில் டீ குடித்தால், அது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, சர்க்கரை நோயை வரவழைத்துவிடும். ஆகவே எப்போதும் வெறும் வயிற்றில் டீ குடிக்காதீர்கள். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோயால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button