திருமணமாகி 60 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை தாம்பரம் மாவட்டம் ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் நடராஜன், இவரது மனைவி அபிநயா நடராஜனை விட மூன்று வயது மூத்தவர்.
திருமணமாகி ஒன்றரை மாதங்கள் ஆகிறது, இருவரும் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
சம்பவத்தன்று அபிநயா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
நடராஜனும் சிறுதொழிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அபிநயாவை காணவில்லை.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]வீட்டின் பீரோ கதவு திறந்து கிடந்த நிலையில், அங்கிருந்து நடராஜனின் தாயாரின் நகைகள் காணவில்லை.
அபிநயாவின் செல்போனை தொடர்பு கொண்டு பார்த்ததில் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தாம்பரம் போலீசில் புகார் அளித்து அவர்கள் நடத்திய விசாரணையில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதும், அபிநயாவை பெற்றோரை பிரிந்துவிட்டு தனியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் அபிநயா தரப்பில் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், அபிநயா வேண்டுமென்றே இதை செய்தாரா என்பதும் தெரியவந்தது.போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.