அழகு குறிப்புகள்

மீண்டும் கைக்கொக்கிறார்களா சமந்தா – நாக சைதன்யா

நேற்று வெளியான நடிகை சமந்தாவின் “யசோதா” திரைப்படம் வசூல் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.சமந்தாவின் நடிப்பை பலரும் பாராட்டினர். சமூக வலைதளங்களில் படம் குறித்த பாராட்டுகளும், கருத்துகளும் குவிந்து வரும் நிலையில், சமந்தாவும் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது நாக சைதன்யாவும் சமந்தாவும் தங்களின் அடுத்த பெரிய பட்ஜெட் படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆனால், படத்தை இயக்குவது யார், எந்தெந்த மொழிகளில் தயாராகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] முன்னதாக, காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் இயக்குனர் கரண் ஜோஹர் சமந்தாவின் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சமந்தா, “இப்போது எங்கள் இருவரையும் ஒரே அறையில் வைத்தால், கூர்மையான பொருளை அங்கேயே மறைத்து வைக்க வேண்டும்” என்று பதிலளித்தார். சமந்தா மற்றும் நாக சைதன்யா அக்டோபர் 2017 இல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு, கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

சில தினங்களுக்கு முன் சமந்தா அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சமந்தா, கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் பதிவில், அவர் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரிய நோயிலிருந்து விரைவில் குணமடைவார் என்றும் கூறினார்.

மயோசிடிஸ் உள்ளவர்களுக்கு சோர்வு மற்றும் தசை வலி அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. நோய் முழுமையாக குணமடைய நேரம் எடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button