சமையல் குறிப்புகள்

செட்டிநாடு மசாலா சீயம்

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி – 1/2 கப்

* உளுத்தம் பருப்பு – 1/2 கப்

Related Articles

* வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)masalaseeyam 1634813725

செய்முறை:

* முதலில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை மிக்சரில் போட்டு, லேசாக நீர் தெளித்து தெளித்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, உப்பு தூவி வதக்கி, துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு வதக்கி வைத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், மாவை உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

* இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான செட்டிநாடு மசாலா சீயம் தயார்.

குறிப்பு:

* மாவை எண்ணெயில் போடும் போது வட்ட வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

* மாவை கிரைண்டரில் போட்டு அரைத்தால் மாவு இன்னும் மெதுமெதுவென்று வரும்.

* நீங்கள் அரைத்த மாவு மிகவும் நீராக இருந்தால், அத்துடன் சிறிது அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக சேர்த்து விட வேண்டாம்.

* பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்தினால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button