சமையல் குறிப்புகள்

சுவையான பன்னீர் கோலாபுரி

தேவையான பொருட்கள்:

கோலாபுரி மசாலாவிற்கு…

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

Related Articles

* பூண்டு – 9 பல் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது)

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* மல்லி – 2 டீஸ்பூன்

* எள்ளு விதைகள் – 2 டீஸ்பூன்

* கசகசா – டீஸ்பூன்

* துருவிய தேங்காய – 1/4 கப்

* கிராம்பு – 3

* ஏலக்காய் – 2

* கல்பாசி – 1

* காஷ்மீரி வர மிளகாய் – 5

* பிரியாணி இலை – 1

* ஜாதிக்காய் – 1 சிட்டிகை (துருவியது)

* வெந்தயம் – சிறிது

* பட்டை – 1 இன்ச்

* மிளகு – 4-5

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – 1/2 முதல் 3/4 கப்

பிற பொருட்கள்:

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* தக்காளி – 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* தண்ணீர் – தேவையான அளவு

* பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, மிளகு, மல்லி, சீரகம், கல்பாசி, காஷ்மீரி வரமிளகாய், ஜாதிக்காய், பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.

* பின்பு அதில் கசகசா, எள்ளு விதைகள் மற்றும் துருவிய தேங்காயை சேர்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 3/4 அளவு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து சில நொடிகள் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

Paneer Kolhapuri Recipe In Tamil
* இப்போது மிக்சர் ஜாரில் வறுத்த மசாலா பொருட்கள் மற்றும் வதக்கிய வெங்காயத்தைப் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 2-3 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.

* பின்பு அதில் 1-1 1/4 கப் நீரை ஊற்ற நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில் வைத்து 7-8 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* அடுத்து துண்டுகளாக்கப்பட்ட பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பன்னீர் கோலாபுரி தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button