சமையல் குறிப்புகள்

பன்னீர் புர்ஜி சாண்ட்விச்

தேவையான பொருட்கள்:

* பிரட் – 4 துண்டுகள்

* வெண்ணெய்/நெய் – 2 டீஸ்பூன்

Related Articles

* நெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* மஞ்சுள் தூள் – 1 சிட்டிகை

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (வட்டமாக நறுக்கியது)

* தக்காளி – 1 (வட்டமாக நறுக்கியது)

* பன்னீர் – 1/4 கப் (துருவியது)பன்னீர் புர்ஜி சாண்ட்விச்

செய்முறை:

* முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பின் பிரட் துண்டுகளில் முன்னும் பின்னும் நெய் அல்லது வெண்ணெயை தடவி, பொன்னிறமாக டோஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

* பின் அதில் துருவிய பன்னீர், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

* பின்பு அந்த பன்னீர் மசாலாவை டோஸ்ட் செய்த பிரட் துண்டின் மீது வைத்து, அதன் மேல் வெங்காயம் மற்றும் தக்காளியை வைக்க வேண்டும்.

* பின் அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி, அதன் மீது மற்றொரு டோஸ்ட் செய்த பிரட் துண்டை வைக்க வேண்டும். இப்போது சுவையான பன்னீர் புர்ஜி சாண்ட்விச் தயார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button