கை பராமரிப்பு

உங்களுக்கு பட்டுப்போன்ற கைகள் வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்!

மென்மையான கைகள் வேண்டும் என்பதுதான் பலரது விருப்பம். பட்டுப்போன்ற கைகளுக்காக பலவித கிரீம்களை வாங்கி உபயோகிக்க வேண்டாம் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே மென்மையான கைகளை உபயோகிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.

கைகள் சொரசொரப்பாக இருந்தால் பார்க்கவே சகிக்காது. அதுவும் வீட்டில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, என கைகளுக்கு அதிக வேலை கொடுப்பதால் கைகளில் செல்கள் இறந்துவிடும். இதுவே சொறசொறப்பை தரும். கைகளை வெதுவெதுப்பான நீரில் நன்றாக ஊறவைத்து ஸ்க்ரப் செய்தால் போதும் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.

கைகளின் மென்மைக்கு தேன், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவைகளை உபயோகிக்கலாம். பால் கைகளின் மென்மைக்கும் பளபளப்புக்கும் ஏற்றது. பாலை வெதுவெதுப்பாக காய்ச்சி அதில் கைகளை 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ கைகள் மென்மையாகும்.

எலுமிச்சை தோலினை நன்றாக கைகளின் மீது தேய்க்க சொறசொறப்பு நீங்கி சருமம் மென்மையாகும். அதேபோல் கடல் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கைகளில் தேய்க்க கைகளில் கருமை நிறம் இருந்தால் மாறிவிடும். கைகளின் தோல்கள் மென்மையாகும்.

சர்க்கரை, ஆலிவ் எண்ணெய், புதினா ஆயில் ஆகியவற்றுடன் சிறிதளவு பால் சேர்த்து கலந்து கைகளில் பூசி ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் கைகள் பளபளப்பாவதோடு தோல்கள் மென்மையாகும்.

ஒரு அகன்ற கிண்ணத்தில் வெதுப்பான நீரை ஊற்றி ரோஸ்மேரி ஆயில், ரோஜா இதழ்கள், சில துளிகள் ஆலிவ் ஆயில் போன்றவைகளை ஊற்றி கைகளை ஊறவைக்கவும். 10 நிமிடங்கள் ஊறிய பின்னர் மென்மையான துண்டினால் கைகளை கழுவ வேண்டும்.

வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து அதனுடன் 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் தேன் கலந்து நன்கு கைகளில் பூசவும். பின்னர் 5 அல்லது 10 நிமிடங்கள் ஊறவைத்து கைகளை குளிர்ந்த நீரில் கழுவவும்.

கைகளை மென்மையாக மசாஜ் சிறந்த முறையாகும். தேங்காய் எண்ணெய், சிறிதளவு பாதம் எண்ணெய், சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஆகியவைகளை கலந்து மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் கைகள் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button