ஆரோக்கியம் குறிப்புகள்

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகள், காய்கறி எனக்கு வேண்டவே வேண்டாம்!’ சொல்வதற்கான காரணம்…!-

வெண்டைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் என ஒவ்வொரு காய்கறிக்கும் குழந்தைகள் மத்தியில் எதிர்ப்பாளர்கள் இருப்பார்கள்.

காய்கறிகளை ஒதுக்குதல்

சில பெரியவர்களுமேகூட குறிப்பிட்ட காய்கறிகளை, யாருக்கும் தெரியாமல் ஒதுக்கிவைப்பது உண்டு. காரணம் கேட்டால், `எனக்கு அதோட டேஸ்டே பிடிக்கல’ என்பார்கள்.

காய்கறிகளை ஒதுக்கிவைப்பவர்கள் அனைவருமே எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வி, `இது எவ்வளவு நல்லது தெரியுமா? இதைப்போய் ஏன் ஒதுக்குற?’ என்பது. நிலைமை அப்படியிருக்க, `காய்கறியை ஒதுக்குபவர்களிடம் இப்படியான கேள்விகளை இனி யாரும் கேட்காதீர்கள்’ என்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள். அதற்கு அவர்கள் முன்வைக்கும் விளக்கம், `குழந்தையோ பெரியவரோ.., அவர் காய்கறியை ஒதுக்குவதற்குக் காரணம் அவர்களின் பெற்றோர்கள்தான்!’ என்பது.
ஜெனிஃபர் ஸ்மித்நபரைப் பொறுத்தும் அவரின் குடும்ப வரலாற்றைப் பொறுத்தும்தான் அது அமையும்
fyuyfuyu
அமெரிக்காவைச் சேர்ந்த University of Kentucky School of Medicine என்ற பல்கலைக்கழகத்தில், ஏறத்தாழ 175 பேருக்கு மத்தியில் செய்யப்பட்ட ஆய்வொன்றில், `குறிப்பிட்ட காய்கறியை அதன் சுவைக்காக ஒதுக்குவதென்பது, குறிப்பிட்ட ஒருவகை மரபணு சார்ந்த பிரச்னை’ என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

“ TAS2R38 எனப்படும் சுவைக்கான மரபணுவில் இடர்ப்பாடுகள் ஏற்படும்போது, அவை இரண்டாக மாறும். இவை, சுவையை உணர்வதில் சிக்கலை ஏற்படுத்தும்”
மரபணுமருத்துவர் ஜெனிஃபர் ஸ்மித்இந்தப் பிரச்னை, காய்கறிகளில் மட்டுமன்றி காபி, டார்க் சாக்லேட், மதுபானம் போன்ற எந்த உணவுப்பொருளின் சுவையின் மீதும் ஏற்படலாம்.

“நபரைப் பொறுத்தும் அவரின் குடும்ப வரலாற்றைப் பொறுத்தும்தான் அது அமையும்” எனக் கூறியுள்ளார் கென்டக்கி பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஜெனிஃபர் ஸ்மித்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button