ஆரோக்கியம் குறிப்புகள்

ஷாக் ஆயிடுவீங்க! கணவனுக்கு உயிர் போகுமாம்.! மனைவி வேலைக்கு போனா,

தற்போதைய வாழ்வியல் முறையில் தம்பதிகள் இருவரும் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கின்றது.

அப்பொழுதுதான் கடன் சுமை இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் தான் பிள்ளைகளைக் கூட சரிவர கவனிக்க முடியாமல் கணவன் மனைவி இருவரும் ஓடி, ஓடி உழைத்து வருகின்றனர்.

என்ன தான் மனைவி வேலைக்குப் போய் குடும்ப பாரத்தை பகிர்ந்து கொண்டாலும், மனைவி அதிகமாக சம்பளம் வாங்கினால் கணவர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தற்போதைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணவன் மனைவிக்கு இடையே பாத் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.
u65tutyiu
அதில் பெண்கள் குடும்பத்திற்காக 40% சம்பாதித்தால் பிரச்சனை இல்லை. ஆனால், ஆண்களைக் காட்டிலும் அதிகமாக சம்பாதிக்கும் போது கணவன்மார்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகின்றதாம். திருமணத்திற்கு முன்பு அதனை பெரும் பிரச்சனையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால், திருமணத்திற்குப் பின்னர் குடும்ப, பொருளாதார நிர்வாக ரீதியாக பெண்களிடம் செல்லும் பொழுது மன உளைச்சலுக்கு ஆண்கள் ஆளாவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சில குடும்பங்களில் சாதக நிலை மாறி, இந்த மன உளைச்சல் விவாகரத்து வரை செல்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button