தலைமுடி சிகிச்சை

சூப்பர் டிப்ஸ்! வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வைக்க வாரத்திற்கு 2 முறை இத தடவினாலே போதும்!

முடியில் ஏற்பட கூடிய பிரச்சினைக்கு நாம் தான் முதல் காரணமாக உள்ளோம். இதை சரி செய்ய ஏதேதோ வழிகளை தேடும் நாம் இயற்கையில் உள்ள வழிகளை மறந்து விடுகின்றோம்.

இயற்கை ரீதியாகவே முடியின் எல்லாவித பிரச்சினைகளுக்கும் தீர்வை கண்டு விடலாம். அதுவும் இந்த கருப்பு எண்ணெயை வைத்து முடியின் அனைத்து பிரச்சினைக்கு தீர்வை கண்டு விடலாம்.

வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வைக்க இந்த குறிப்பை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்
  • ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
  • கருஞ்சீரக எண்ணெய் 2 ஸ்பூன்
  • ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன்
தயாரிப்பு முறை

முதலில் ஆலிவ் எண்ணெய்யை கருஞ்சீரக எண்ணெயுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2முறை செய்து வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் வேகமாக முடி வளரும்.625.500.560.350.16

முடி அடர்த்தியாக வளர இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.

இதற்கு தேவையானவை…
  • தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
  • கருஞ்ஜீரக எண்ணெய் 2 ஸ்பூன்
  • ஆலிவ் எண்ணெய் 1 1/2 ஸ்பூன்
  • ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன்
  • தேன் 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
தயாரிப்பு முறை

முதலில் மேற்சொன்ன எல்லா எண்ணெய்களையும் ஒன்றன் பின் ஒன்றான நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை இறுதியில் கலந்து முடியின் வேர்களில் தடவவும்.

20 நிமிடம் கழித்து சிறிது சிகைக்காய் அல்லது ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடி சட்டென வளரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button