உங்களுக்கு தெரியுமா பெண்கள் தலையில் பூக்களை சூடுவதால் ஏற்படும் ஆரோக்கியமான நன்மைகள் என்னென்ன?

அக்காலம்  முதல் தற்காலம்  வரை பெரும்பாலான பெண்கள்  தலையில் பூக்கள் வைப்பதை மிகவும்  விரும்புவார்கள். உலகம் முழுவதும் சுமாராக 38 ஆயிரம் கோடிக்குமேல்  பூக்களில் வகைகள் உள்ளது. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய  நடைமுறையில் புழக்கத்தில் உள்ளன. அதிகமான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப்  பயன்படுத்தப்படுகின்றது. அதிலும் குறிப்பிட்ட வகையிலான 500 கோடி பூக்கள் மருத்துவத்திற்கு  பயன்படுத்தப்படுகின்றது.

பெண்கள்   தலையில் பூக்களை   வைப்பதால் ஏராளமான   நன்மைகள் இருக்கின்றது. அதிலும்   எந்த பூவை, எவ்வளவு காலம், எந்த நேரத்தில்   வைக்கலாம், அதனால் என்ன பயன் என்பது பற்றி   இதில் காணலாம்.

பூக்களைச் சூடும் கால அளவு:

ரோஜாப்பூ – 2 நாள்கள் வரை

மல்லிகைப்பூ – அரை நாள்கள் வரை

முல்லைப்பூ – 18 மணி நேரம்

அல்லிப்பூ – 3 நாள்கள் வரை

தாழம்பூ – 5 நாள்கள் வரை

செண்பகப்பூ – 15 நாள்கள் வரை

சந்தனப்பூ – 1 நாள்கள் மட்டும்

மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ – சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ – இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

பூக்களினால்   ஏற்படும் பயன்கள்:

ரோஜாப்பூ :

ரோஜா   பூக்களை   தலையில் சூடிக்  கொள்வதால் நமக்கு   தலைசுற்றல் மற்றும்  கண் நோய் போன்றவற்றின்   குறைபாடுகள் இல்லாமல் இருக்கும்.

மல்லிகைப்பூ:

தலைவலியை   குணப்படுத்தும். நல்லதொரு   மனத்தை தருவது மட்டுமில்லமல்  மன அமைதிக்கு வழிவகுக்கும். கண்களுக்கு   குளிர்ச்சியை தர வல்லது.

செண்பகப்பூ:

வாதத்தைக் குணப்படுத்துவது  மட்டுமில்லாமல் கண் பார்வைத் திறனை மேம்படுத்த  உதவுகிறது.

பாதிரிப்பூ:

காது தொடர்பான  கோளாறுகளைக் சரிசெய்துவிடும். காய்ச்சல்  மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.  செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது.compress imag

செம்பருத்திப் பூ:

உடல்  உஷ்ணத்தை  குறைப்பது மட்டுமில்லாமல், தலைமுடி  தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

மகிழம்பூ:

தலை தொடர்பான  பல பிரச்சனைகளை சரிசெய்வது  மட்டுமில்லாமல், பல் வலி மற்றும்  பல் சொத்தை போன்ற குறைபாடுகளை நீக்கிவிடும்.

வில்வப்பூ:

சுவாசத்தைச் சீராக்க  உதவுகிறது. காச நோயைக்  குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

சித்தகத்திப்பூ:

இது  மூளை சுறுசுறுப்பாக  இயங்க உதவுவது மட்டுமில்லாமல்,  தலை வலியை குறைக்கும் வல்லமை பெற்றது.

தாழம்பூ:

இது  நல்ல நறுமணம்  வீசக் கூடியது.  உடல் சோர்வை நீக்கி  சீரான தூக்கத்திற்கு உதவுகின்றது.

 தாமரைப்பூ:

தலை எரிச்சல், தலை சுற்றல் போன்ற  உடல் உபாதைகளை சரிசெய்யும். மன உளைச்சலை  குறைத்து, மன அமைதிக்கு வழி வகுக்கும்.தூக்கமின்மையை  சரிசெய்து, நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கிறது.

கனகாம்பரம்பூ:

  •  தலை வலி மற்றும் தலை பாரத்தை குறைத்து விடும்.
  • தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்ற  பூக்கள் வாதம், கபம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்து விடும்.

பூக்களைச் சூடும் முறை:

  • பூக்களைக் காது  பகுதியின் மேல் மற்றும் கீழ் நுனியின்  இடைவெளிகளுக்கு இடையில் சூட வேண்டும்.
  • உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடுவதை  தவிர்க்க வேண்டும்.
  • மனம்  உள்ள பூக்களை  வாசனை இல்லாத பூக்களுடன்  சேர்ந்து சுடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி  செய்தால் கூந்தல் வளர்ச்சி தடுக்கப்படும்.
  • ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பக பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்து  கட்டியோ, கோர்த்தோ சூடினால் மிகவும் நல்லது.
  • மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்ற  பூக்களுடன் கற்பூரத்தை சேர்த்துச் சூடினால் மனம் அமைதி கிடைக்கும்.
  • மல்லிகையை  குளிப்பதற்கு  முன்பு சூடவேண்டும்.
  • முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பே  சூடுவது நல்லது. உடலில் எண்ணெய் தேய்த்தால் தாழம்பூ   வைப்பது நன்மை பயக்கும்.

பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:

  • பூக்களில் இருக்கும் பிராண ஆற்றலானது, மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள  சுரப்பிகள் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகள் சீராக வேலை செய்ய உதவுகிறது.
  • பூக்களில்  உள்ள பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைக்கும். இதனால்  நமக்கு மன நிம்மதி கிடைக்கும்.
  • பூக்களை  கூந்தலில்  சூடுவதால் மனமாற்றத்திற்கு  உதவுகிறது, அதுமட்டுமில்லாமல்  ஒரு விடயத்தை பல கோணங்களில் பார்க்க உதவுகிறது.
  • மன  அழுத்தத்தால்  ஏற்படும் செல்களின்  இழப்பை தடுத்து, உடலில்  உள்ள செல்களுக்கு புத்துணர்ச்சி  அளிக்கின்றது. மன அழுத்தம் குறைந்து  மகிழ்ச்சியை உண்டாக்க வல்லது. இத்தனை  நன்மைகள் உள்ள பூக்களை தினமும் சூடி   வாருங்கள், தோழிகளே. இது உங்களுக்கு அழகை   தருவது மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தையும் தந்து,  மன நிம்மதியை தர உதவுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button