அடேங்கப்பா! எல்லா புருஷனும் ஸ்ரேயா கணவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்….

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.

இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபகாலமாக தனது காதல் கணவருடன் செய்யும் ரொமான்டிக் விஷயங்களை வீடியோவாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது “நான் ஏன் என் கணவரை திருமணம் செய்துகொண்டேன் தெரியுமா? என கூறி அன்ரீவ் கோஸ்சிவ் பாத்திரம் கழுவுவதை காண்பித்தார். மேலும் ஒவ்வொரு கணவரும் அவரது மனைவிகளுக்கு இப்படி உதவி செய்யுங்கள் என கூறி தன் கணவருக்கும் நச் என்று ஒரு முத்தம் கொடுத்து அந்த வீடியோவை முடித்துள்ளார். இந்த வீடியோ அவரது
ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button