அவுஸ்திரேலிய மருத்துவர்களின் வியக்க வைத்த ஆய்வு முடிவு! கொரோனாவை 48 மணிநேரத்தில் அழிக்கலாம்..

ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை ஒருவரின் உடலில் இருந்து 48 மணிநேரத்தில் அழிக்க முடியும் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகமெங்கும் பெரிய பிரச்சினை என்றால் அது கொரோனா வைரஸ் தான். அது ஆரம்பித்தில் இருந்து உலக நாடுகளுக்கே தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கொரோனா வைரஸால் மக்கள் நாளுக்கு நாள் உயிரிழந்துகொண்டே வருகிறார்கள்.

இதனை தடுக்க பல முயற்ச்சிகளையும் அரசாங்கம் வழிநடத்தி வருகிறது. மேலும், கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுப்பிடிக்க முடியாமல் உலகநாடுகள் திணறி வருகிறது.

அந்த வகையில், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவனத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஐவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தானது, சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான இந்த ஐவர்மெக்டின், கோவிட் -19 வைரசுக்கு எதிராக மிகவும் பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்துவதை கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர்.

625.500.560.350.160.300.0 2

மேலும், இந்த மருந்தின் ஒரு டோஸ் மூலம், கொரோனா வைரஸின் அனைத்து ஆர்என்ஏ மூலக்கூறுகளையும் முழுமையாக 48 மணி நேரத்திற்குள் அகற்ற முடியும் என்றும், 24 மணி நேரத்தில் கூட அதில் குறிப்பிடத்தக்க அளவு குறைவதையும் நாங்கள் கண்டறிந்தோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒட்டுண்ணி மருந்து, வைரசில் எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவில்லை என்றாலும், இந்த மருந்து வைரஸை அழிப்பதற்காக உயிரணு திறனைக் குறைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி பரவலாகக் கிடைப்பதற்கு முன்னதாகவே இந்த மருந்து உதவியாக இருக்கும் என்று நம்புவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த மருந்தை மனிதர்களுக்கு கொடுக்கத் தகுந்த சரியான அளவை கண்டுபிடிக்கும் சோதனைகளில் தற்போது மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button