மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தோலில் இந்த மாதிரி அறிகுறி இருக்கா? அப்ப தினமும் செய்யுங்க…

குளிர் காலங்களில் சில பேருக்கு தோல் நோய் வரும். இதை குளிர் தோல்நோய் என்று கூறுகின்றன. இந்த நோய் மிகவும் அரிதானது. ஆனால் ஒரு சில பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோய் நமது தோலை நேரடியாக பாதிக்கிறது. அதிகமான குளிர்ச்சியான வெப்பநிலையில் காட்டினால் இந்நோய் வரும் என்று குறிப்பிடுகிறார்கள்.

அதிகமான குளிர்ச்சி உடைய நீரில் காலை விட்டாலோ அல்லது அதிகமான குளிர்ச்சி உள்ள இடங்களில் இருந்தாலோ இது போன்ற நோய்கள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் குளிர் 3 டிகிரிக்கும் கீழே இருந்தால் மட்டுமே வருகிறது. மிகவும் அதிகமான குளிர்ச்சி உடைய இடங்களில் வசிப்பவர்கள் இந்த பிரச்சினையால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களை இந்த நோய் மிகவும் தாக்குகிறது.

சில பேருக்கு இந்த நோயினால் ரத்த புற்றுநோய் கூட வர வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நடுத்தர வயது உள்ள மக்கள் மற்றும் வயதானவர்களுக்கு இந்த நோய் அதிகமாக தாக்குகிறது என்று கண்டுபிடிப்பட்டுள்ளது.

ஒரு சிலர் இந்த நோயின் வீரியம் உச்சமடைந்து மரணத்தை கூட அடைந்துள்ளனர். குளிர் பிரதேசங்களில் தான் இந்த நோய் அதிகமாக காணப்படுகிறது. இந்த நோய் தொற்றுவது இல்லை ஒரு சிலருக்கே இது பாதிப்பை உண்டாக்குகிறது.

இந்நோய் ஆரம்பத்தில் கண்டறிந்து மருத்துவரிடம் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகளை தவறாது எடுத்து கொண்டால் இந்நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.[penci_ads id=”penci_ads_1″]

எச்சரிக்கை:

நீச்சல் அடிக்கும் பொழுது எப்பொழுதுமே நீரின் வெப்பத்தை ஆராய்ந்து அதன் பிறகு நீச்சல் செய்ய வேண்டியது மிக அவசியம்.
மிக அதிகமான குளிர் உள்ள நீரில் நீச்சல் அடித்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. நீச்சல் அடிப்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உறைந்த பனி உள்ள இடங்களில் உள்ள நீரில் நீச்சல் அடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நம் உடல் எப்பொழுதுமே குறிப்பிட்ட வெப்ப நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.
சொல்லப்போனால் நம் உடல் சூடான வெப்பநிலை கொண்டது மிகவும் அதிகமான குளிர் கொண்ட வெப்ப நிலைக்கு நம் உடல் திடீரென்று மாறும் பொழுது இது போன்ற பயங்கரமான தோல் நோய் பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே நம் உடலை ஓரளவுக்கு சீரான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] அதிகமான குளிர் இல்லாத வெப்பநிலை அது நம் உடலை வைத்திருக்க வேண்டும்.
இந்த தோல் நோயானது தோலில் மட்டுமே பிரச்சனைகளை ஏற்படுத்த கூடியது இல்லை, மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்படுத்தும். தலைசுற்று, மயக்கம், தலைவலி, ஞாபகமறதி மற்றும் ஒரு சில பேருக்கு புற்றுநோய் கூட வாய்ப்பு உள்ளது.
குளிர் பிரதேசத்தில் உள்ளவர்களும், அதிகமான குளிரில் நீராடுவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும்.
மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button