இசையமைப்பாளரின் இசையில் கொரோனா பாடல் பாடிய நாய் குட்டி!
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கொரோனா பாடல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், அப்பாடலை அவர் வளர்க்கும் நாய் பாடியுள்ளது.
இந்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.