ஆரோக்கியம் குறிப்புகள்

ராசிப்படி இந்த ‘ஒரு பொருள்’ உங்க கூடவே இருந்தால், அதிர்ஷ்டம் எப்பவுமே உங்க கூட இருக்குமாம்…

பலர் அதிர்ஷ்ட வசீகரம் மற்றும் தாயத்துக்களை நம்புகிறார்கள். எனவே அவர்கள் எப்போதும் அவர்களுடன் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். வெவ்வேறு சூழ்நிலைகளில் வெற்றிபெற உதவும் அதிர்ஷ்ட பொருட்களை மக்கள் வைத்திருந்ததாக பண்டைய புராணங்களும் கூறுகின்றன.

இந்த பிரபலமான நம்பிக்கை பல தலைமுறைகளாக உள்ளது. எனவே, ஜோதிடரால் ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்டப் பொருளை வரையறுக்க முடிந்தது. ஒவ்வொரு ராசிக்கும் சில அதிர்ஷ்ட பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் உறுதியுடனும், செய்யும் எல்லாவற்றிலும் ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பதால், இவர்களுக்கு சாவி அதிர்ஷ்டத்தை வசீகரிக்கும் பொருளாகும். மேலும் இவர்களின் ஒருபோதும் கைவிடாத அணுகுமுறை தான் இவர்களுடைய மிகவும் நேர்மறையான பண்பாகும். மேலும் இவர்கள் மற்றவர்களை அவர்களின் இலக்குகளை அடைய ஊக்குவிக்கக்கூடியவர்கள். எனவே வாய்ப்புக்கள் நிறைந்த கதவைத் திறக்க, இந்த ராசிக்காரர்கள் சாவியை தங்களுடன் எப்போதும் வைத்துக் கொள்வது அதிர்ஷ்டத்தை ஈர்க்க உதவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு எண் 7 அதிர்ஷ்டத்தை வசீகரிக்கக்கூடியது. பல நாடுகளில் பல்வேறு கலாச்சாரங்களில் இந்த எண் 7 அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது. இந்த எண் வானவில்லின் 7 நிறங்கள் போன்ற பல்வேறு குறிப்புக்களில் உள்ளது மற்றும் இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு பகடை அதிர்ஷ்டத்தை வசீகரிக்கும் பொருள். மிதுன ராசிக்காரர்கள் சமூக பட்டாம்பூச்சிகள். இவர்கள் எப்போதும் மக்களுடன் கூட வாழவே விரும்புகிறார்கள். மேலும் சூழ்நிலைக்கு ஏற்பட நடந்து கொள்ளக்கூடியவர்கள். எனவே இவர்கள் எப்போதும் தங்களுடன் ஒரு பகடையை வைத்துக் கொள்வது, இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு லேடிபர்டு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் ஒன்றாகும். பொதுவாக கடக ராசிக்காரர்கள் அன்பாகவும், பாசமாகவும் இருப்பார்கள் மற்றும் விலங்குப் பிரியர்கள். லேடிபர்டு அதிர்ஷ்டத்தை பிரதிபலிக்கிறது. எனவே கடக ராசிக்காரர்கள் எங்கேனும் இருக்கும் போது லேடிபர்டை பார்த்தால், அவர்களை நோக்கி அதிர்ஷ்டம் வரும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு விலைமதிப்பற்ற ரத்தினக் கற்கள் அதிர்ஷ்டத்தை வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் கற்கள் சிம்ம ராசிக்காரர்களின் ஆளுமையுடன் எதிரொலிக்கிறது. பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே அழகானவர்கள், துடிப்பானவர்கள் மற்றும் கவர்ச்சிகரமானவர்கள் என்பதால், அவர்களுக்கு ரத்தினக் கற்கள் பிடிக்கிறது மற்றும் அவற்றை மிகவும் கவர்ச்சிகரமானதாக உணர்வதற்கு நகைகளாக அணிகிறார்கள். ரத்தினக் கற்களிலேயே அம்பர் மற்றும் சபையர் ஆகியவை சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானவை.

கன்னி

திருஷ்ட கண் மோசமானதாக தோன்றலாம். ஆனால் அது உண்மையில் தீய சக்திகளை விரட்டுகிறது. கன்னி ராசிக்காரர்களின் அற்புதமான திறமைகளை கண்டு பொறாமை கொண்டவர்களிடமிருந்தும், உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களிடமிருந்தும் கெட்ட மற்றும் பாதுகாப்பற்ற அதிர்வுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க, இந்த திருஷ்ட கண்ணை எப்போதும் தங்களுடன் வைத்திருப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு முக்கோண வடிவம் கொண்ட பொருட்கள் அதிர்ஷ்டமானதாக கூறப்படுகிறது. பிறப்பு, இறப்பு மற்றும் பிரபஞ்சத்துடனான நமது தொடர்பைக் குறிக்க பண்டைய வேதங்கள் முக்கோணங்களை பரிந்துரைத்தன. இந்த அதிர்ஷ்ட பொருள் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையையும் சமநிலையையும் தருகிறது மற்றும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சமநிலையைக் கண்டறிய உதவுகிறது. அதுதான் அவர்களை மற்றவர்களை விட பாரபட்சமற்றதாக ஆக்குகிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குதிரை லாடம் அதிர்ஷ்மானதாக கூறப்படுகிறது. முன்னதாக, குதிரை லாடம் இரும்பால் ஆனதால், இது தீங்கு விளைவிக்கும் எந்த தீய சக்திகளையும், ஆபத்தான புராண உயிரினங்களையும் விரட்டும் அற்புதமான பொருளாக நம்பப்பட்டு வருகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் இந்த பொருளை வைத்திருப்பது, அவர்களின் பாதையில் உள்ள தீய சக்தியை மற்றும் தடைகளை அகற்றி வெற்றி காண உதவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு முயல் பாதம் அதிர்ஷ்டமானதாக கூறப்படுகிறது. ஏனெனில் பண்டைய நாட்டுப்புறக் கதைகளின்படி, நீங்கள் எப்போதாவது மிகவும் ஆபத்தான மற்றும் பேய் பிடித்த இடத்தில் தடுமாறினால் தீய சக்திகளை விரட்டும் ஒரு வலிமையான சக்தியாக முயல் பாதம் செயல்படுகிறது. எனவே நீங்கள் தனுசு ராசிக்காரராக இருந்தால், முயல் பாதத்தை கீசெயினாக மாற்றி உங்களுடன் எப்போதும் வைத்திருங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நான்கு இலை க்ளோவர்கள் அதிர்ஷ்டமானதாக கூறப்படுகிறது. ஏனெனில் இது ஒவ்வொரு முறையும் அவர்களின் அதிர்ஷ்டமானது என்பது நிரூபித்துள்ளது. நான்கு இலை க்ளோவர்கள் நம்பிக்கை மற்றும் செழிப்பை அடையாளப்படுத்துகிறது. மகர ராசிக்காரர்கள் இயற்கை பிரியர்கள். இதுப்போன்ற அழகான இயற்கை பொருட்களை எப்போதும் இவர்கள் தங்களுடன் வைத்திருக்க விரும்பக்கூடியவர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு கிரிக்கெட் பூச்சி மிகவும் அதிர்ஷ்டமானதாக கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, இந்த பூச்சிகள் நல்லிணக்கத்தைக் குறிக்கின்றன மற்றும் தனிமையில் இருக்கும் ஒருவருக்கு இது ஒரு சரியான துணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கிரிக்கெட் பூச்சி பொறிக்கப்பட்ட தாயத்தை ஒருவர் வைத்திருந்தால் அல்லது திடீரென இந்த பூச்சியை கண்டால், அவர்களுக்கு நிச்சயம் ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகிறது என்று அர்த்தம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு ட்ரீம்கேட்சர் (Dreamcatcher) அதிர்ஷ்டத்தையும், சந்தோஷத்தை வழங்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வீட்டில் படுக்கைக்கு அருகில் ஒரு ட்ரீம்கேட்சரைத் தொங்கவிடுவதன் மூலம், மனம் நிம்மதியாக இருக்கும் மற்றும் மன அமைதியைக் கெடுக்கும் கெட்ட கனவுகள் தடுக்கப்படும். மேலும் இதை மீன ராசிக்காரர்கள் எப்போதும் தங்களுடனேயே வைத்திருந்தால், இது மிகவும் இனிமையான அதிர்வுகளைத் தருவது மட்டுமின்றி, எப்போதும் அதிர்ஷ்டத்தை வழங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button