அழகு குறிப்புகள்

சர்வைவர் வெற்றியாளர் இவர் தான்! பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?

சர்வைவர் நிகழ்ச்சியில் நாராயணணுக்கு நடந்த துரோகம் சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. நேற்று முன்தினம் நடந்த சர்வைவர் போட்டியில் முதல் பைனலிஸ்ட்டாக விஜயலக்மி தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் விஜியே நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்ற தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இறுதியாக பைனலிஸ்ட்டுக்கான போட்டி நடந்தது. “நீரின் மீது நிறுத்தப்பட்ட பிளாட்பார்மில் நான்கு எக்ஸ்ட்ரா பகுதிகள் இருக்கும்.

ஒவ்வொரு லெவல் முடியும் போதும் ஒரு பகுதியை நீங்கள் கழற்ற வேண்டும். கடைசியாக யார் தாக்குப் பிடிக்கிறாரோ, அவரே வெற்றியாளர். அவரே இந்த கேமின் முதல் ஃபைனலிஸ்ட்” என்று போட்டியைப் பற்றி அர்ஜூன் விளக்கினார்.

This is pure cheating by the team, @akarjunofficial disqualified person to continue and umapathy had the block after the count down also. Worst level of biased decision. Nepotism to the core. pic.twitter.com/ytj0JyjmV3

— Kovai Massage Master (@KovaiMassage) December 10, 2021
நான்கு பகுதிகளைக் கொண்ட அந்த பிளாட்பார்மில் ஒருவர் நிற்பதே சிரமம் என்னும் போது ஒவ்வொரு பகுதியாக குறையும் சமயத்தில் கால் வைக்கும் பகுதி இன்னமும் குறைந்து கொண்டே வரும்.

ஆனால் இதுதான் சவால். போட்டி ஆரம்பித்து நான்காவது லெவலுக்கான கவுன்ட்டவுன் சொல்லப்பட்டது. பின்னால் இருக்கும் பகுதியை ரிலீஸ் செய்வதற்கான சிக்னல் என்பதால் அந்தப் பகுதியை கழட்டுவதில் போட்டியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

நிற்கும் பகுதி இப்போது இன்னமும் குறுகிவிட்டதால் கால்வலியில் தவித்தார்கள். நாராயணன் காலை சற்று சரிசெய்து வைக்க முயலும் போது தடுமாறி கீழே விழுந்தார்.

அவர் விழுந்த சில விநாடிகளிலேயே உமாபதியும் நீரில் குதித்தார். நாராயணனின் சர்வைவர் பயணம் இங்கு முடிவடைந்தது.

இனி அவர் ஜூரியாக இருப்பார். ஆனால் இவர்கள் விழுந்து சில மணி நேரத்திற்கு பிறகுதான் வனேசாவின் பின்னால் இருக்கும் கட்டை பகுதி விழுந்தது.

உமாபதிக்கும் இவ்வாறுதான் நடந்தது. ஆக இவர்கள் இருவரும் ஃபவுல். மூன்றாவது இடம் நாராயணணுக்கு கிடைத்திருக்க வேண்டும். எனினும் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

போட்டி ஆரம்பித்து எழுபது நிமிடங்கள் கடந்த சிங்க பெண்ணாக இறுதி போட்டிக்கு முதல் பைனலிஸ்ட்டாக விஜி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, அவரே இந்த போட்டியின் வெற்றியாளர் என்ற தகவலும் கசிந்துள்ளது. அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இறுதி நாள் போட்டி நாளைய தினம் நேரலையில் ஒளிபரப்பாகவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button