ஆரோக்கியம் குறிப்புகள்

ரகசியம் இதோ..! திருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க…

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் வீட்டுக்கு முதன் முதலில் திருமணம் முடிந்து வரும் மணப்பெண்ணை வீட்டின் ஐஸ்வர்யம் என சொல்கிறோம். அப்படிப்பட்ட பெண்கள் சில செயல்களை தெரியாமல் செய்தால் அதுவே அந்த வீட்டின் துரதிஷ்டம் ஆகிவிடும்.

 

அது குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். வளையல் பெட்டியில் உடைந்த வளையல்கள் இருந்தால் அதை உடனே அகற்றிவிட வேண்டும். அப்படியே வைக்கக் கூடாது. ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தன்மைக் கொண்டது. இதனால் வைரம் உங்களுக்கு வாங்கலாமா எனத் தெரிந்துகொண்டுதான் பெண்கள் வாங்கவேண்டும்.

 

சில பெண்கள் தாங்கள் பயன்படுத்தும் அலங்காரப் பொருள்களை பூஜைக்கு பயன்படுத்துவார்கள். இப்படி செய்யவே கூடாது. தங்கம் லட்சுமி தாயின் வடிவம் எனப்படுகிறது. எனவே தங்கள் செல்வ செழிப்பை காட்டுவதாக நினைத்து தங்கத்தில் கொலுசு அணியாதீர்கள். அதனால் லெட்சுமி தாயின் சாபத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் திருமண நகைகளை எந்த காரணம் கொண்டும் மற்றவர்களுக்கு இரவலாகக் கொடுக்ககூடாது. அதேபோல் நீங்கள் உபயோகித்த பொட்டை மற்றவருக்கு கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் உங்கள் அதிர்ஷ்டம் போய்விடும்.

 

கணவன், மனைவி இடையே பந்தத்தை அதிகரிக்க பெண்கள் அடிக்கடி மெகந்தி போட வேண்டும். அதேபோல் திருமண புடவையில் சிறு கீறல்கூட விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி விழுந்தால் கெட்ட சகுணம் ஆகிவிடும். இதை திருமணம் முடிந்த பெண்கள் கொஞ்சம் பாளோ செய்யுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button