அழகு குறிப்புகள்

துபாயில் பங்களா வாங்கிய முகேஷ் அம்பானி

உலக பணக்காரர்களில் இந்தியாவின் முகேஷ் அம்பானியும் ஒருவர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் ஆவார்.

முகேஷ் அம்பானி வெளிநாட்டில் சொத்துக்களை வாங்குகிறார். சில மாதங்களுக்கு முன், அவரது மகன் ஆனந்த் அம்பானி, துபாயில், 664 கோடி ரூபாய்க்கு, சொகுசு பங்களாவை வாங்கினார்.

இந்நிலையில், முகேஷ் அம்பானி மீண்டும் ஒரு சொகுசு பங்களாவை துபாயில் வாங்கியுள்ளார். 1,352 கோடிக்கு துபாயில் உள்ள பாம் ஜுமேராவில் ஒரு பங்களாவை வாங்கினார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] குவைத்தை சேர்ந்த அல்ஷய்யா குழுமத்தின் தலைவரான முகமது அல்ஷய்யாவிடம் இருந்து முகேஷ் அம்பானி கடந்த வாரம் இந்த சொகுசு பங்களாவை வாங்கியதாக கூறப்படுகிறது.

அவர் மகன் ஆனந்த் அம்பானிக்காக வாங்கிய வீடும், புதிதாக வாங்கிய வீடும் அருகருகே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சொகுசு பங்களாவில் 10 படுக்கையறைகள், ஒரு ஸ்பா மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள் உள்ளன.

முகேஷ் அம்பானி சமீபகாலமாக வெளிநாட்டில் சொத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு ஸ்டோக் பார்க் என்ற இங்கிலாந்து கிளப்பை ரூ.656 மில்லியனுக்கு வாங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button