ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இந்த அறிகு றிகள் இருந்தால் மின் விசிறி பயன்படுத்துவதை உடனே நிறுத் துங்கள்?

மின் விசிறி பயன்படுத்துவதால் காய்ச்சல் வெப்பத்தைக் குறைக்கலாம். அது சற்று சௌகரியமாக இருக்கலாம். ஆனால் அது மூச்சுக் குழாய், கண்கள், தொண்டை ஆகிய இடங்களை வறட்சியாக்கிவிடும்.

ஆங்காங்கே மக்கள் பருவநிலை மாற்றம், வைரஸ் தொற்று என காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த ஆய்வு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தூசியினால் ஏற்படும் சளிக் காய்ச்சல் இருந்தால் அவர்கள் மின் விசிறிக்குக் கீழ் படுத்தால் காய்ச்சலை தீவிரமாக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தூசியினால் ஏற்படும் காய்ச்சலில் ஒழுகும் சளி , மூக்கு எரிச்சல், தொடர் தும்மல், கண் எரிச்சல், சைனஸ் , இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். ஆனால் இது வைரஸால் ஏற்படக்கூடியது அல்ல.

எனவே இப்படி தூசியினால் ஏற்படக் கூடியது என்பதால் மின் விசிறிக்குக் கீழ் படுக்கும்போது அந்தக் காற்றில் சுற்றிக்கொண்டிருக்கும் தூசியை நாம் சுவாசிக்க நேர்ந்தால் அவை நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும் என்பதே மார்க் ரெடிக்ட் கூற்றாகும். இவர் தூக்கத்திற்கான ஆலோசகர்.
மின் விசிறி பயன்படுத்துவதால் காய்ச்சல் வெப்பத்தைக் குறைக்கலாம். அது சற்று சௌகரியமாக இருக்கலாம். ஆனால் அது மூச்சுக் குழாய், கண்கள், தொண்டை ஆகிய இடங்களை வறட்சியாக்கிவிடும் என்கிறார்.

ஒரு கட்டத்தில் இது ஆஸ்துமாவைக் கூட உண்டாக்கலாம் என்கிறார் மார்க். அதேபோல் ஏற்கெனவே சைனஸ் பிரச்னை , ஆஸ்துமா பிரச்னை இருந்தால் அவர்களுக்கு தூசியினால் ஏற்படும் காய்ச்சல் வந்தால் முற்றிலும் மின் விசிறி காற்றைத் தவிர்த்தல் நல்லது. காற்றில் பரவியிருக்கும் தூசிகள், துகள்கள் மூக்கு துவாரங்களுக்குள் சென்று காய்ச்சல் தீவிரத்தை அதிகமாக்கிவிடும் என்கிறார்.

எனவே இனி வரும் காலங்களில் தூசியினால் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மின் விசிறி பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button