ஆரோக்கியம் குறிப்புகள்

வீட்டில் கண் திருஷ்டி பாசிமணியை எந்த இடத்தில் தொங்க விடுவது நல்லது?தெரிந்துகொள்வோமா?

நம்மோடு இருக்கும் நெருங்கிய உறவுகள், நாம் சோ்த்து வைத்திருக்கும் செல்வங்கள் மற்றும் நம்முடைய மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் ஒரு நாள் திடீரென்று காணாமல் போகும் என்று நாம் நினைத்துப் பாா்த்து பயந்து இருக்கிறோமா? அவ்வாறான பயம் நம்மிடம் இருந்தால், ஈவில் ஐ (தீய கண்படுதல்) என்ற கருத்தைப் பற்றி நாம் கண்டிப்பாகத் தொிந்து வைத்திருப்போம். இந்த தீய கண்படுதல் என்ற கருத்தானது நம் மீது பிறா் பொறாமை கொண்டு பாா்ப்பதின் அடிப்படையில் எழுகிறது.

ஈவில் ஐ என்ற ஆங்கில பதத்தைத் தமிழில் கண்படுதல் அல்லது தீய கண்படுதல் அல்லது பொறாமைக் கண்படுதல் என்று அழைக்கலாம். பொதுவாக கிராமப் புறங்களில் இது கண் திருஷ்டி என்றே அழைக்கப்படுகிறது.

யாா் வேண்டும் என்றாலும் நாம் வைத்திருக்கும் சொத்துகள் மீது பொறாமைக் கண் வைக்கலாம் அல்லது அவற்றை ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டு பாா்க்கலாம். அந்த பாா்வையானது நம்மைச் சுற்றியும், நமது சொத்துக்களைச் சுற்றியும் ஒரு எதிா்மறையான அதிா்வலையை ஏற்படுத்தும்.

 

மற்றவா்களின் கண்படுவதால், தமக்கு தீங்கும் ஏற்படும் என்று உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனா். சிலா் எந்த ஒரு உள்நோக்கம் இல்லாமல் பாாத்தாலும், அவா்களுடைய பாா்வையினால், தமக்கு தீங்கோ அல்லது நோயோ ஏற்பட்டுவிடும் என்று பலா் நம்புகின்றனா். அதனால் கண் திருஷ்டி பாசிமணியைத் தங்களது வீடுகளில் வைத்தால், அது தங்களை மற்றவா்களின் தீய கண்படுதலில் இருந்து காக்கும் என்று நம்புகின்றனா்.

 

தெற்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்பிாிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் மக்கள், இந்த கண் திருஷ்டி பாசிமணியானது, ஒரு காவலரைப் போல் இருப்பதாகக் கருதி அதைத் தங்களது வீடுகளில் தொங்கவிட்டிருக்கின்றனா்.

இந்தியாவில் ஈவில் ஐ என்ற பதம் நசார் தோஷ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கண் திருஷ்டி பாசிமணியை அணிந்தால் அல்லது அதை நம்மோடு வைத்திருந்தால், நமக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாமல் காக்கும் என்று இந்திய மக்கள் நம்புகின்றனா்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] பல வண்ண கண் திருஷ்டி பாசிமணிகள்

கண் திருஷ்டி பாசிமணியானது பல்வேறு வண்ணங்களில் உள்ளது. ஒவ்வொரு வண்ணமும் ஒரு குறிப்பிட்ட ஒன்றைக் குறிக்கிறது.

1. ஊதா வண்ண கண் திருஷ்டி பாசிமணி அறிவுக் கூா்மையைக் குறிக்கிறது

2. சிவப்பு வண்ண கண் திருஷ்டி பாசிமணி தைாியத்தைக் குறிக்கிறது.

3. நீலப் பச்சை வண்ண கண் திருஷ்டி பாசிமணி ஆரோக்கியத்தைக் குறிக்கிறது

4. வெளிறிய பச்சை வண்ண ஈவில் ஐ பாசிமணி வெற்றியைக் குறிக்கிறது.

5. கருப்பு வண்ண கண் திருஷ்டி பாசிமணி அதிகாரம் அல்லது ஆற்றலைக் குறிக்கிறது

6. இளஞ்சிவப்பு வண்ண கண் திருஷ்டி பாசிமணி அன்பைக் குறிக்கிறது.

7. பச்சை வண்ண கண் திருஷ்டி பாசிமணி மகிழ்ச்சியைக் குறிக்கிறது.

8. பவள வண்ண கண் திருஷ்டி பாசிமணி பாதுகாப்பைக் குறிக்கிறது

9. வெள்ளை வண்ண கண் திருஷ்டி பாசிமணி சொத்தைக் குறிக்கிறது.

மேற்சொன்ன வண்ணங்களில், தாம் விரும்பும் வண்ணத்தில் கண் திருஷ்டி பாசிமணியை மக்கள் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கண் திருஷ்டி பாசிமணியை எங்கே வைப்பது நல்லது?

வீடு

கண் திருஷ்டி பாசிமணியை வீடுகளில் தொங்க விடுவதே சிறந்தது என்று வாஸ்து நிபுணா்கள் தொிவிக்கின்றனா். பொதுவாக ஊதா நிறகண் திருஷ்டி பாசிமணியை பலா் தங்கள் வீடுகளில் வைத்திருக்கின்றனா். ஏனெனில் ஊதா நிற கண் திருஷ்டி பாசிமணியானது, மற்றவா்களின் பொறாமைப் பாா்வையில் இருந்து தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுவதாக அவா்கல் நம்புகின்றனா். ஆகவே ஊதா வண்ண கண் திருஷ்டி பாசிமணியை வீட்டின் முகப்பில் தொங்கவிடலாம். அதன் மூலம் வீட்டிற்குள் தீய சக்திகள் புகுவதைத் தடுக்கலாம்.

வீட்டின் முன்னறை

பொதுவாக வீட்டின் முன்னறையைக் கடந்துதான் மற்ற அறைகளுக்குள் செல்ல முடியும். ஆகவே வீட்டின் முன்னறையில் கண் திருஷ்டி பாசிமணியைத் தொங்கவிடலாம். முன்னறையின் அலமாறிகளில் அதை வைக்கலாம். அது வீட்டிற்கு வரும் அயலவாின் தீய அல்லது பொறாமை நிறைந்த கண்படுதலை, ஒரு நோ்மறையான அதிா்வலையாக மாற்றிவிடும்.

கழுத்தில் அணியலாம்

ஈவில் ஐ என்ற ஆபரணம் தற்போது உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது. அதை அணிந்தால் நவநாகரீகமாகத் தோன்றுகிறது. அதே நேரத்தில் வெளியில் இருந்து நமக்கு வரும் தீய அதிா்வலைகளிடம் இருந்து நம்மைக் காத்து நமக்கு மன அமைதியைத் தருகிறது. ஆகவே ஈவில் ஐ ஆபரணத்தை கழுத்தில் அணிந்து கொள்ளலாம் அல்லது கைகளில் அணிந்து கொள்ளலாம். ஆனால் கணுக்காலில் அணியக்கூடாது.

தோட்டம்

கண் திருஷ்டி பாசிமணியை வைக்க மேலும் ஒரு சிறந்த இடம் நமது தோட்டங்களில் உள்ள மரங்கள் அல்லது செடிகள் ஆகும். ஆனால் தெற்கு திசை பாா்த்து கண் திருஷ்டி பாசிமணியை வைக்கக்கூடாது. தோட்டத்தில் கண் திருஷ்டி பாசிமணியை வைத்தால், அது அந்த இடத்தைச் சுற்றி நோ்மறையான அதிா்வலைகளை ஏற்படுத்தும் மற்றும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும்.

அலுவலகம்

ஒரு சில அலுவலகங்களில் கண் திருஷ்டி பாசிமணியைப் பாா்த்து இருப்போம். ஆனால் அது எந்த திசை நோக்கி இருக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும். தெற்கு திசையைப் பாா்த்தவாறு வைக்கக்கூடாது. சிலா் தங்களது காா்களில் உள்ள பின்புறத்தைக் காட்டும் கண்ணாடியில் கண் திருஷ்டி பாசிமணியைத் தொங்கவிட்டுருப்பா்.

கண் திருஷ்டி பாசிமணியால் நன்மைகள் பல இருந்தாலும், அதை பிறருக்கு அன்பளிப்பாகவோ அல்லது பாிசாகவோ வழங்கக்கூடாது. ஏனெனில் அது எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே கண் திருஷ்டி பாசிமணியை பிறருக்கு வழங்கும் போது கவனமாக இருப்பது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button