சமையல் குறிப்புகள்

தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு

* சாம்பார் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

Related Articles

* நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பூண்டு – 4 பல்

* சின்ன வெங்காயம் – 20 (தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்)

அரைப்பதற்கு…

* தக்காளி – 5

* பட்டை – 1/2 இன்ச்

* கிராம்பு – 2

* பொட்டுக்கடலை – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]tomato kuzhambu 1629376446

செய்முறை:

* முதலில் தக்காளியை எண்ணெயில் போட்டு, நன்கு தக்காளியின் தோல் சுருங்கும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய தக்காளியுடன், தேங்காய், பொட்டுக்கடலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் சாம்பார் பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, தேவையான அளவு நீரை சேர்த்து நன்கு பச்சை வாசனைப் போக கொதிக்க வைத்து, இறுதியாக அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான தக்காளி குழம்பு தயார்.

குறிப்பு:

* சாம்பார் பவுடர் இல்லாதவர்கள் மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.

* இந்த குழம்பு தயாரிப்பதற்கு நாட்டுத் தக்காளி மற்றும் பெங்களூர் தக்காளி இரண்டையும் கலந்தும் பயன்படுத்தலாம்.

* தக்காளியை நன்கு வதக்கிய பின்னரே அரைக்க வேண்டும். இல்லாவிட்டால் கிரேவியில் பச்சை வாசனை இருக்கும்.

* இந்த தக்காளி குழம்பை 3 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். குறிப்பாக வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திக்கும் போது செய்ய ஏற்ற குழம்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button