சரும பராமரிப்பு OG

மம்மி மாஸ்க் பயன்படுத்தலாம்! பல நாள்களாக முகத்தைப் பராமரிக்கவில்லையா?!

இந்த மம்மி மாஸ்க் சிகிச்சையானது வெயிலால் சருமத்தில் எரிந்த சருமம் உள்ள பெண்களுக்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறை கூட தங்கள் முகத்தை பராமரிக்க முடியாத பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. தோல் பளபளப்பாக மாறும்.

பெண்கள் தங்கள் வீடு, அலுவலகம், குழந்தைகள்… வேலை… வேலை என ஓடுகிறார்கள். தினமும் இருந்தாலும் சரி, வாரம் ஒரு முறையாக இருந்தாலும் சரி, பெண்கள் அழகைத் தவறவிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த “மம்மி மாஸ்க் தெரபி” பரிந்துரைக்கப்படுகிறது. கீழே உள்ள ஆப்பிள் கலவையை செய்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால், நேரம் கிடைக்கும் போது முகத்தில் தடவலாம். முக ப்ளீச், முக விளைவுகள் கிடைக்கும். மம்மி மாஸ்க் சிகிச்சை என்றால் என்ன?

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

”ஒரு கனிந்த ஆப்பிளைத் தோல் சீவி, விதை நீக்கி மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆப்பிள் பேஸ்ட் 3 டீஸ்பூன், ஆப்பிள் சிடர் வினிகர் 2 டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சோளமாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். இந்த ஆப்பிள் பேக் திக்காக இருக்க வேண்டும். பேண்டேஜ் துணியை உங்கள் முகம் அளவுக்கு வெட்டி, அதில் கண் மற்றும் மூக்கு வருகிற இடங்களில் சின்னச்சின்ன வட்டமாக வெட்டி எடுத்துவிடுங்கள். இந்த பேண்டேஜ் துணியை முகத்தின் மீது போடுங்கள். அதன் மேல் திக்கான ஆப்பிள் பேக்கை தடவி விடுங்கள். இதன் மேலே மற்றொரு பேண்டேஜை (மேலே சொன்னபடியே வெட்டி) போட்டுக்கொள்ளவும். அரை மணி நேரம் முகத்தில் இது ஊற வேண்டும். இதை ஆப்பிள் பேக் தெரபி அல்லது மம்மி மாஸ்க் தெரபி என்று சொல்வோம். இந்த மாஸ்க்கை முகத்தில் போட்ட பிறகு அதை கைகளால் லேசாக அழுத்தி விட வேண்டும். அப்போதுதான் ஆப்பிள்சாறும், ஆப்பிள் சிடர் வினிகரும் சருமத்தின் அடி ஆழம் வரை சென்று சருமத்தைப் பளிச்சிட வைக்கும், வெயிலால் சருமம் கறுத்துப்போன பெண்களும் , முகத்தை மாதத்துக்கு ஒரு தடவைகூட பராமரிக்க முடியாத பெண்களும் இந்த மம்மி மாஸ்க் தெரபியை டிரை பண்ணுங்கள். சருமம் பளிச்சென்று மாறிவிடும் .

பழுத்த ஆப்பிள்கள் சருமத்தில் திறம்பட செயல்படும். உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு பச்சை ஆப்பிள்களைப் பயன்படுத்துவது பொருந்தாது.

மேலே குறிப்பிட்டுள்ள ஆப்பிள்களை வார இறுதியில் தயாரித்து குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்தால், அவை 15 நாட்கள் வரை புத்துணர்ச்சியுடன் இருக்கும். இருப்பினும், முகத்தில் பூசும் போது, ​​சோள மாவை மட்டும் சேர்க்கவும்.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button