Other News

பன்னீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்:

தாபா மசாலாவிற்கு…

* மல்லி விதைகள் – 2 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* மிளகு – 1/4 டீஸ்பூன்

* கிராம்பு – 3

* ஏலக்காய் – 2

* பட்டை – 1/2 இன்ச்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

ஊற வைப்பதற்கு…

* பன்னீர் – ஒரு கப்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் – 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* உப்பு – 1/4 டீஸ்பூன்

* நெய்/வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு…

* நெய்/வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* பிரியாணி இலை – 1

* ஏலக்காய் – 2

* பட்டை – 1 இன்ச்

* கிராம்பு – 2

* சீரகம் – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* தயிர் – 1/2 கப்

* தண்ணீர் – 1/2 கப்

* உலர்ந்த வெந்தய கீரை/கசூரி மெத்தி – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)1643202

செய்முறை:

* முதலில் ஒரு பெரிய பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீரை ஒரு நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாபா மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து குறைவான தீயில் நன்கு வறுத்து இறக்கி, குளிர்ந்ததும் மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தாபா மசாலா பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து குறைவான தீயில் வதக்க வேண்டும்.

* பின்பு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின், அதில் தயிரை ஊற்றி நன்கு கிளறி, எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* அதன் பின் உலர்ந்த வெந்தய கீரை, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button