அண்ணன் செய்த வெறிச்செயல்!!தங்கையின் ஆடையில் மாதவிடாய் ரத்தக்கறை…
மும்பை தானே மாவட்டத்தில் உள்ள உலாஸ் நகர். இப்பகுதியில் பிரிஜேஷ் என்ற 30 வயது இளைஞர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் அவரது சகோதரியும் வசித்து வருகிறார்.
12 வயது சிறுமி தனது தந்தை மற்றும் தாயை இழந்து தனது சகோதரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரியின் உடையில் ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்தார். எப்படி நடந்தது என்று கேட்கிறார்.
அந்த நேரத்தில், சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டது. ஆச்சிருமிக்கு மாதவிடாய் வந்ததே தெரியவில்லை, அண்ணனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.
இதை அண்ணன் தவறாக புரிந்து கொள்கிறான். அவரது சகோதரி ஒருவருடன் உடலுறவு கொள்கிறார். அதனால் தான் இப்படி ரத்தம் வருகிறது என்று நினைத்து கொண்டு தங்கையை கொடுமைப்படுத்தி இருக்கிறார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
நான்கு நாட்களாக அடித்து உதைத்து இருக்கிறார். சத்தம் வெளியே கேட்கக் கூடாது என்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்து அடித்து உதைத்து இருக்கிறார். ஈவு இரக்கமே இல்லாமல் தங்கையின் உடல் முழுவதும் சூடு வைத்திருக்கிறார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பிரிஜேஸ் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் சிறுமிக்கு மாதவிடாய் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால் அது பற்றி அண்ணனிடம் சொல்ல முடியவில்லை.
இதனால் தங்கை வேறு ஒருவருடன் பாலியல் உறவில் இருக்கிறார் என்பதை தவறாக புரிந்து கொண்டு அடித்த உதைத்து உடல் முழுவதும் சூடு வைத்ததில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்திருக்கிறார் என்று வழக்குபதிவு செய்துள்ளனர்.