சமையல் குறிப்புகள்

சுவையான அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு

தேவையான பொருட்கள்:

* புளி – 1 பெரிய எலுமிச்சை அளவு

* நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

Related Articles

* முருங்கைக்காய் – 2

* சுண்டக்காய் வத்தல் – ஒரு கையளவு

* கறிவேப்பிலை – சிறிது

* கடுகு – 1 டீஸ்பூன்

* துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 2

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

வறுத்து அரைப்பதற்கு…

* கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* வரமிளகாய் – 6

* மிளகு – 1/2 டீஸ்பூன்

* அரிசி – 1 டீஸ்பூன்

* வெந்தயம் – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* எண்ணெய் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் முருங்கைக்காயை 2 இன்ச் துண்டுகளாக வெட்டி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், மிளகு, அரிசி, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பிறகு 2 கப் நீரை வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அந்நீரில் புளியைப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் கையால் பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சுண்டக்காய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். அப்படி வதக்கும் போது குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும். இல்லாவிட்டால் கருத்துவிடும்.

Arachuvitta Vatha Kuzhambu Recipe In Tamil
* பின் வறுத்த சுண்டைக்காயை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயில் கடுகு, துவரம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அடுத்து அதில் நறுக்கிய முருங்கைக்காயைப் போட்டு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கறிவேப்பிலையைப் போட்டு, குறைவான தீயில் வைத்து குழம்பை 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் சிறிது நீரில் அரைத்த பொடியை கரைத்துக் கொண்டு, கொதிக்கும் குழம்பில் சேர்த்து, மீண்டும் 7-8 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதிக்கும் போது குழம்பானது சற்று கெட்டியாவதை காண்பீர்கள்.

* இறுதியாக வெல்லம் மற்றும் வறுத்த சுண்டைக்காயை குழம்பில் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு தயார்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button