சிற்றுண்டி வகைகள்

பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்

பன்னீர் போண்டா மிகவும் சுவையாக இருக்கும். இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

பூரணத்துக்கு :

துருவிய பன்னீர் – 1 கப்
பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 1\2 டீஸ்பூன்
பொடித்த மசாலா (பட்டை, லவங்கம், ஏலக்காய்) – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1\4 கப்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மேல் மாவுக்கு :

கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 1\4 கப்
ஓமம் – 1\4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1\2 டீஸ்பூன்
சமையல் சோடா – 1\4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டைப் போட்டு தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

* நன்றாக வதங்கியதும், பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். தேவைப்பட்டால் காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

* காய்கள் சுருள வதங்கியதும், உப்பு, மிளகாய்த்தூள், பன்னீர் சேர்த்து நன்கு வதக்கி தனியாத்தூள், பொடித்த மசாலாத்தூள், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கினால் பூரணம் ரெடி! ஆறியதும் பூரணத்தை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் மேல் மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

* உருட்டிய பூரண உருண்டைகளை மாவில் தோய்த்தெடுத்து காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

* சுவையான பன்னீர் போண்டா ரெடி.201606011417026082 how to make Paneer Bonda SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button