ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா?

சிலருக்கு இரவில் நல்ல தூக்கம் என்பதே இருக்காது. ஒரு சின்ன சத்தம் கேட்டாலும் அவர்களுக்கு தூக்கம் கலைந்து விடும். இரவில் நிம்மதியான தூக்கம் இல்லையென்றால் உடல்ரீதியாக பல பிரச்சனைகள் சந்திக்கநேரிடும்.

ஒருவருக்கு குறைந்தது 8 மணி நேரமாவது நல்ல தூக்கம் தேவை. அப்போது தான் மறுநாள் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் அன்றாட வேலைகளை பார்க்க முடியும்.

இந்த ஐந்து உணவுகளை சாப்பிட்டால் இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும் என்பது ஆய்வில் உறுதி செய்யபட்டுள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இரவில் நிம்மதியாக தூங்க சாப்பிட வேண்டிய உணவுகள்:-

வாழைப்பழத்தில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. அதில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளதால் இரவில் நிம்மதியாக தூங்க உதவியாக இருக்கின்றது.
பாலில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இதனால் தினமும் தூங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் சூடான பால் பருகுவதால் மூளைக்கு நல்ல ஆற்றலை கொடுத்து தூக்கத்தை தூண்ட வழி செய்கிறது.
செர்ரி பழங்களில் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளதால் தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. மனச்சோர்வு, கவலைகள் போன்றவை மறந்து மனதை நிம்மதியாக இருக்க வைக்கின்றது.

தினமும் பாதாம் எடுத்து கொள்வது உடலுக்கு பல ஆரோக்கியங்களை தேடி தருகின்றது. அதுவும் இரவு நேரத்தில் எடுத்து கொண்டால் மூளையின் நரம்புகளை அமைதிப்படுத்தி நிம்மதியான தூக்கத்தை உண்டாக்கும்.
டார்க் சாக்லேட்டில் இயற்கையாகவே செரோடோனின் உள்ளதால் நன்றான தூக்கத்தை கொடுக்கும்.

Related Articles

2 Comments

  1. ஓ…. சமையக் குறிப்புல இதுல சொல்லி தறிங்களா

  2. எனக்கு இது எதுவுமே செட்டாக வில்லை. எல்லாம் சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button