சைவம்

வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை

கோவிலில் கொடுக்கும் புளியோதரை அனைவருக்கும் பிடிக்கும். எப்படி செய்தாலும் கோவிலில் செய்வதுபோல் வரவில்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த செய்முறையை தருகிறோம்.

வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை
தேவையான பொருட்கள் :

நல்லெண்ணை – 5 தேக்கரண்டி
வேர்கடலை – 1/4 கப்
கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
அரிசி – 2 கப்

வறுத்து பொடிக்க :

நல்லெண்ணை – 1 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
தனியா – 1/2 தெக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
எள்ளு – 1 தேக்கரண்டி

செய்முறை :

* வறுத்துப் பொடிக்க வேண்டிய பொருட்களை தனித்தனியாக வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அரிசியை உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

* புளியை கரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின் கடலை பருப்பு, உளுந்து, வேர்கடலை சேர்த்து பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.

* அடுத்து, புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

* இப்போது உப்பு போடக் கூடாது. ஏன்னா, கொதிச்ச பிறகு குழம்பு அளவு கம்மியாகும் போது உப்பு அதிகமாகிடும். அதனால் சாப்பாடு கிளரும் போது உப்பு போட்டுக்கொள்ளலாம்.

* புளிக்கரைசல் நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்ததும் உதிரியாக வடித்த சாதம், தேவையான அளவு உப்பு சோத்து, அதனுடன் அரைத்து வைத்த அந்த பொடியையும் தேவையான அளவுக்கு சேர்த்து கலந்துவிடவும்.

* 20 நிமிடத்திற்கு பிறகு பரிமாறவும்.

* சூப்பரான கோவில் புளியோதரை ரெடி.
201701041054390202 temple style pulihora SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button