மருத்துவ குறிப்பு

மாதவிடாய் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்

தண்ணீர் அதிகம் குடித்தால் மாதவிடாய் காலங்களில் பல்வேறு நோய் தொற்றுகளை சரி செய்து கொள்ளலாம்.

மாதவிடாய் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்
பெண்கள் பொதுவாக வயதுக்கு வருவதை ஏதோ என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு உடம்பும், மனதும் வேறுபட்டு காணப்படும். பெண்கள் வயதுக்கு வருவது தொடர்பாக நீங்கள் அனைவரும் இந்த வயதில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறர் நம்மை தொடுவதில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உறவினர்கள் யாரேனும் தவறான தொடுதல் செய்தால் அதனை ஆசிரியரிடமோ அல்லது அம்மாவிடமோ அவசியம் சொல்ல வேண்டும். பெண்கள் பருவமடையும்போது சில உடல் உறுப்புகள் வளர்ச்சி அடையும்.

201704251422199252 Drink more water during menstrual periods SECVPF

உடலில் சில இடங்களில் உரோமங்கள் அதிகமாகும். இவற்றை கண்டு பயம் வேண்டாம். இது தானாக இயற்கையில் வளர்ச்சி அடையும்போது நடைபெறுபவை ஆகும். இதற்காக பயம் வேண்டாம். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் தேவையில்லாத சிந்தனைகள், தலைவலி வரலாம். யாரை பார்த்தாலும் கோபம் கூட சமயங்களில் அதிகமாக வரலாம்.

கெட்ட எண்ணங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.இது போன்ற சமயங்களில் தண்ணீர் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடித்தால் உடல் நலம் ஓரளவு உங்கள் கட்டுக்குள் வரும். தண்ணீர் அதிகம் குடித்தால் மாதவிடாய் காலங்களில் பல்வேறு நோய் தொற்றுகளை சரி செய்து கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button