சிற்றுண்டி வகைகள்

முளயாரி தோசா

என்னென்ன தேவை?

மூங்கில் அரிசி 2 கப், உளுந்து முக்கால் கப், வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, தேங்காய் 1,சர்க்கரை தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

மூங்கில் அரிசியை அலசி எட்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். வெந்தயம், உளுந்தை தனித்தனியாக 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, முதலில் வெந்தயத்தையும் பிறகு உளுந்தையும் தண்ணீர் சேர்க்காமல் சிறிதுநேரம் அரைத்து, பிறகு அதோடு மூங்கில் அரிசியைச் சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்க விடுங்கள். புளித்த மாவை ஆப்பச் சட்டியில் ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு, மூடி வேகவிட்டு எடுங்கள். தேங்காயைத் துருவி, பால் எடுத்து, சர்க்கரை சேர்த்து கலக்கி முளயாரி தோசாவில் ஊற்றி ஊறவைத்துச் சாப்பிடலாம்.2oVl5ZR

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button