ஆரோக்கியம் குறிப்புகள்

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள்?

தற்போது நாம் அனைவரும் மூழ்கிக்கிடக்கும் ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளிவரும் நீல நிற ஒளி, நம் கண் பார்வையை பறித்துவிடும், என்று அமெரிக்காவின் டோலிடோ பல்கலைக்கழகம் ஆய்வின் மூலம் எச்சரித்துள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போனிலேயே நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். வளர்ச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிற சமயத்தில், உடல்நலத்தினை பற்றி யோசிக்க நேரமில்லையா? ஸ்மார்ட் போன் மட்டுமல்லாமல் கம்ப்யூட்டர், லப்டாப், டப்லெட் போன்ற அனைத்து டிஜிட்டல் சாதனங்களில் இருந்து வெளிவரும் நீல நிற ஒளிக்கற்றையானது, கண்ணின் விழித்திரையை சேதப்படுத்துகிறது.

இதனால் தான் குருட்டுத்தன்மை ஏற்படுகிறது. இந்த ஒளிக்கற்றை கண் விழித்திரையில் உள்ள செல் உயிரணுக்களின் மூலக்கூற்றை மாற்றி அமைக்கிறது.

இது மெதுவான மாகுலர் சீர்கேடு ஆகும். ஒரு புதிய வகையான கண் துளி போன்றவை.
அதிக ஒளி கண்ணில் படுவதினால் ஒளிச்சேர்க்கை உயிரணுக்களில் மரணம் ஏற்படுகிறது.
நீ ரெட்டினில் நீல நிற ஒளியைப் பிரகாசிக்கிறது என்றால், விழித்திரை ஒளிமின்னழுத்த செல்கள் அழிக்கப்படுகின்றன.

உயிரணுக்கள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுவதில்லை, இறந்துவிட்டால், அவ்வளவு தான். நம் கண்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

இருட்டில் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டப்லெட்டைப் பயன்படுத்தாதீர்கள்.
உங்கள் டிஜிட்டல் சாதனங்களை முற்றிலும் உங்கள் படுக்கையறையில் இருந்து தொலைவில் வைக்க முயற்சியுங்கள். சன்கிளாஸ்கள் இந்த ஒளிக்கற்றைகளில் இருந்து நம் கண்களை பாதுகாக்கிறது. எனவே, அவற்றை கூட பயன்படுத்தலாம்.

உறங்க செல்வதற்கு முன் இத்தகைய டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தாமல், புத்தகங்கள் வாசிப்பது, குழந்தைகளின் பேசி மகிழ்வது போன்ற செயல்களை செய்யலாம். இதனால் நல்ல உறக்கம் மற்றும் மன நிம்மதி கிடைக்கும்.

இந்த சிறிய சாதனம் எவ்வளவு தீங்கு விளைவிப்பதென்று இப்போது உங்களுக்குத் தெரியும். வருமுன் காப்பதே சிறந்தது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button