சைவம்

சூப்பரான கொண்டைக்கடலை குருமா

சப்பாத்தி, பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் கொண்டைக்கடலை குருமா. இன்று இந்த கொண்டைக்கடலை குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

சூப்பரான கொண்டைக்கடலை குருமா
தேவையான பொருள்கள் :

கொண்டைக்கடலை – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 1
இஞ்சி – சிறிது
பூண்டு – 3 பற்கள்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கொத்துமல்லி இலை – ஒரு கொத்து
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்

அரைக்க :

தேங்காய் – 3 துண்டுகள்
கசகசா – 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 1/4 டீஸ்பூன்

தாளிக்க :

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கிராம்பு – 1
பிரிஞ்சி இலை – 1
சீரகம் – கொஞ்சம்
பெருஞ்சீரகம் – கொஞ்சம்
முந்திரி – 5

செய்முறை :

* கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

* ஊறவைத்த கொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்து, நீரை வடித்து வைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டை தட்டி வைக்கவும்.

* வெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஊறியதும் தேங்காய், பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

* எல்லாம் நன்றாகக் கலந்து, சிறிது நேரம் கொதித்து, வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

* கொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவிக் இறக்கி பரிமாறவும்.

* இப்போது அருமையான, கொண்டைக்கடலை குருமா தயார்.

* இது பூரி, சப்பாத்தி, நாண், சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.201702241519120695 Kondai kadalai kurma SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button