சிற்றுண்டி வகைகள்

ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்

மாலையில் குழந்தைகளுக்கு ஜவ்வரிசி வைத்து ஊத்தப்பம் செய்வது கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்
தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி – 4 கப்,
உளுந்து – ஒரு கப்,
ஜவ்வரிசி – கால் கிலோ,
வெங்காயம் – 2,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
இட்லி மிளகாய் பொடி – தேவையான அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும்.

* மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும்.

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி. கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும்.

* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இட்லி மிளகாய் பொடி தூவி, சுற்றி எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

* சூப்பரான ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம் ரெடி.

குறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.201705021315421929 sago onion uthappam SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button