சிற்றுண்டி வகைகள்

பிடி கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

அரிசி ரவை – 2 டம்ளர் (2 ஆழாக்கு),
உப்பு – தேவைக்கு,
வேகவைக்க தண்ணீர் – 2 டம்ளர்,
தாளிக்க எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் – 1/2 கப்,
கடுகு – 2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்,
காயந்த மிளகாய் – 6-8,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
துருவிய தேங்காய் – 1 கப்.sl4832

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்த்துப் பின் தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், அரிசி ரவையைப் போட்டு கைவிடாமல் கிளறவும். பின் தேங்காயையும் சேர்த்துக் கிளறி கீழே இறக்கவும். அரிசி ரவை முக்கால் பதம் வெந்திருக்கும். சூடாயிருக்கும்போதே உருட்டிவிடவும். பின் உருண்டைகளை ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும். மோர்க்குழம்பு, வெங்காய சட்னி, தக்காளித்தொக்குடன் பரிமாற பொருத்தமாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button