கலங்க வைக்கும் சம்பவம்! தம்பியுடன் குடும்பிப்பிடி சண்டையிடும் பிரபல நடிகை….

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் பிரபல நடிகை தனது சகோதரருடன் முடியை பிடித்துக்கொண்டு சண்டை போடும் வீடியோ வைரலாகியுள்ளது.

நடிகை அதுல்யா ரவி கோயம்புத்தூரை பூர்விகமாக கொண்டவர். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை கேப்மாரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் நாடோடிகள் 2 படம் வெளியானது.

தற்போது படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் பொழுதைக் கழிப்பதால் நாள்தோறும் காணொளிகளை வெளியிட்டு வருகின்றார்.

ஆம் தனது தம்பியின் தலைமுடியினைப் பிடித்து சண்டை போடுட்டுள்ள காட்சியினை வெளியிட்டு 5வது நாளே நானும் என் தம்பியும் சண்டை போட ஆரம்பித்து விட்டோம் என பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button