ஆரோக்கியம் குறிப்புகள்

முடி 5 மடங்கு வேகமாக வளரனுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

இளைமையில் முடி உதிர்வால் இன்று ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர்.

ஒருவருக்கு தலைமுடி கொத்தாக வந்தால், உடனே போதுமான பராமரிப்பைக் கொடுக்க வேண்டியது அவசியம்.

வழுக்கை ஆவதற்கான முதல் முடி உதிர்வை தடுக்க இந்த அற்புத எண்ணை தயாரிப்பு போதும்.

தயாரிப்பது எப்படி?
கருஞ்சீரகத்தையும் வெந்தயத்தையும் எடுத்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.
தேங்காயெண்ணெயுடன் பொடிகளை நன்றாக கலந்து சிறிய பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
அடுப்பில் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதற்கு நடுவில் இந்த பாத்திரத்தை வைத்து சூடு செய்தால் போதும்.
இவை சற்று சூடேறியவுடன் இடுக்கி கொண்டு அதை வெளியே எடுத்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.
பிறகு தினமும் வெயிலில் வைக்கவும்.
3 அல்லது 4 நாள் வைத்து எடுத்தால் எண்ணெயின் நிறம் மாறிவிடும். பிறகு இதை பயன்படுத்தலாம்.

எண்ணெய் நன்றாக ஊற ஊற இவற்றின் பலன் பன்மடங்கு கிடைக்கும். தினமும் தலைக்கு இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.

குறிப்பாக உள்ளங்கையில் தடவி தலையின் ஸ்கால்பகுதியில் விரல்களால் இலேசாக மசாஜ் கொடுத்து வந்தால் கூந்தல் மயிர்க்கால்களுக்கு ஊட்டம் கிடைக்கும்.

முடி உதிர்தல் பிரச்சனை படிப்படியாக குறையும். குறைந்தது இரண்டு மாதங்களாவது நீங்கள் பொறுமையோடு செய்தால் பலன் நிச்சயமாக கிடைக்கும்.

ஆனால் முடி உதிர்தல் பிரச்சனை நிரந்தரமாக நீங்கும் அளவுக்கு பலன் இந்த எண்ணெயில் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button