அழகு குறிப்புகள்

மீண்டும் சூடுபடுத்தி மட்டும் சாப்பிடாதீங்க! விஷமாகும் 5 உணவுகள்

இன்று பெரும்பாலான மக்கள் உணவுகளை பிரிட்ஜில் சேமித்து வைத்து அவ்வப்போது சூடுபடுத்தி சாப்பிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.

இவ்வாறு உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதால் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறிகின்றனர்.

குறிப்பிட்ட சில உணவுகளை இவ்வாறு செய்வதால், அது விஷமாகவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுவதுடன், ஊட்டச்சத்து, சுவை ஆகியவை குறித்த உணவில் இல்லாமல் போவதுடன், பல நோய்களுக்கும் வழிவகுக்கின்றது.

கீரை (Spinach)
குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சாப்பிடவே கூடாது உணவுப்பட்டியலில் கீரை முதலாவதாக இருக்கின்றது. கீரையை சூடுபடுத்தி சாப்பிடும் போது அதில் உள்ள நைட்ரேட்டுகள் வேறு ஒரு பொருளாக மாறிவதுடன் புற்றுநோயை ஏற்படுத்துகின்றதாம்.

உருளைக்கிழங்கு (Potato)
பலரும் விரும்பி உண்ணும் உருளைக்கிழங்கினையும் பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதனை சூடாக்கும் போது, அரிய வகை நுண்ணுயிரிகளின் வளர்ச்சி ஏற்படுவதுடன், செரிமான அமைப்பில் எதிர்மறையான பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

முட்டை (Egg)
அதிக அளவு புரோட்டீன் சத்து காணப்படும் முட்டை உடம்பிற்கு பல நன்மைகளை அளிக்கின்றது. முட்டையை சமைத்த உடனேயே உட்கொள்ள வேண்டும். பொறித்த மற்றும் அவித்த முட்டைகளை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால் எதிர்மறையான விளைவினை ஏற்படுத்துவதுடன் வயிறு வலியும் ஏற்படுகின்றது.

சிக்கன்(Chicken)
முட்டையைப் போலவே, சிக்கனிலும் புரதம் நிறைந்துள்ளது. மேலும் சிக்கனை மீண்டும் சுட வைத்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனையும் ஏற்படும். எனவே மீண்டும் சூடாக்கிய பிறகு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சாதம் (Rice)
ஏழைகளின் பசியை அதிகமாக போக்கும் உணவாக இருக்கும் அரிசி சாதத்தினையும் தற்போது பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடாக்கி சாப்பிடும் வழக்கத்தினை மக்கள் கொண்டுள்ளனர். இதனால் மிகப்பெரிய பிரச்சினைகளை மட்டுமின்றி விஷமாகவும் மாறிவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button