​பொதுவானவை

பெண்கள் வாகனம் ஓட்டும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

பெண்கள் வாகனம் ஓட்டும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
வண்டியை ஓட்டும்போது ஆர்.சி.புத்தகம், இன்ஸ்சூரன்ஸ் உங்கள் அடையாள அட்டை ஆகியவற்றின் பிரதிகள் கையில் இருக்க வேண்டும்.* வண்டி ஓட்டுவது மறக்காமலிருக்க எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் வண்டியை ஓட்டி பார்ப்பதும் அடிக்கடி டூவீலர் அல்லது கார் ஓட்டிச்செல்வதும் அவசியம்.* டூ-வீலராக இருந்தால் ஹெல்மெட்டும், காராக இருந்தால் சீட்பெல்ட்டும் அணிவது அவசியம்.* புதிதாக ஓர் இடத்துக்கு வண்டியை ஓட்டிச் செல்வதானால் பாதுகாப்பான வழியைத் தெரிந்து செல்வது நல்லது.

* வண்டியை எடுப்பதற்கு முன்பு எரிபொருள் இருக்கிறதா, டயர் நல்ல நிலையில் இருக்கிறதா, பிரேக் பிடிக்கிறதா என சரிபார்ப்பது மிகவும் அவசியம்.

* தனியே வாகனம் ஓட்டிச்செல்லும்போது கண்டிப்பாக செல்போனை எடுத்துச் செல்லவும். அது சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறதா என சரிபார்க்கவும்.

* அறிமுகமில்லாத யாருக்கும் லிஃப்ட் தரவேண்டாம்.

* வாகனம் பழுதனால் அந்த இடத்துக்கே வந்து சரி செய்துகொடுக்கும் சர்வீஸ் சென்டர் அல்லது மெக்கானிக்கின் செல் நம்பர்களை எப்போதும் உங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

* வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது உங்கள் கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உதாரணத்துக்கு வழி கேட்பவர்கள், சிக்னலில் பொருள்கள் விற்பவர்கள்.

* உங்கள் காரில் தானாகவே கதவு பூட்டிக் கொள்ளும் வசதி இருப்பினும் நீங்களும் ஒருமுறை சரிபார்க்கவும்.

* வண்டி ஓட்டும்போது செல்ஃபோனில் பேசுவதை கட்டாயம் தவிர்க்கவும். எத்தனை அவசரமான அழைப்பாக இருந்தாலும் பாதுகாப்பான ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டுப் பேசுவதே நல்லது.

* வண்டியை பார்க் செய்யும் போது எக்காரணம் கொண்டும் செல்ஃபோனில் பேசுவதைத் தவிருங்கள். வண்டியைப் பூட்டி, சாவி உங்கள் கைகளில் இருப்பதை உறுதி செய்த பிறகு தான் அந்த இடத்தைவிட்டு நகர வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button