உங்களுக்கு தெரியுமா பார்மலின் மீனால் ஏற்படும் ஆபத்துகள்… மீனிலிருந்து பார்மலினை ஈஸியா எப்படி நீக்கலாம் தெரியுமா?

இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கிய உணவுகளே ஆபத்தானவையாக மாறிவிட்டது. அதற்கு காரணம் அதில் செய்யப்படும் கலப்படமாகும். இன்று கலப்படம் இல்லாத உணவுகளை கண்டுபிடிப்பதே அரிதான ஒன்றாகிவிட்டது. இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கிறது.

சமீபத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய கலப்படம் மீன் கெட்டுப்போகாமல் இருக்க அதில் பார்மலின் தடவி விற்பதாகும். இது மிகவும் ஆபத்தான ஒரு கலப்படமாகும், பார்மலின் தடவப்பட்ட மீனை சாப்பிடுவது நமது உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த பதிவில் பார்மலினால் ஏற்படும் ஆபத்துகள் என்ன அதனை உணவில் இருந்து எப்படி பிரிப்பது என்பதை பார்க்கலாம்.

பார்மலின் என்றால் என்ன?

பார்மலின் என்பது ஃபார்மால்டிஹைடில் இருந்து பெறப்படுகிறது, புற்றுநோயை உருவாக்குவதில் இது முக்கியமான பங்கை வகிக்கிறது. இது பிணவறையில் பிரேதங்களை கெட்டுப்போகாமல் வைக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும். இது உணவுப்பொருள்களின் ஆயுளை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது மிகக்குறுகிய காலக்கட்டத்தில் குமட்டல், மயக்கம், மூக்கு, கண் மற்றும் தொண்டையில் எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன் அதிகளவு நுகர்வு புற்றுநோயை ஏற்படுத்தும்.

மீன்களில் ஏன் பார்மலின் பயன்படுத்தப்படுகிறது?

மீன் விரைவில் கெட்டுப்போகக்கூடிய ஒரு பொருளாகும். மீன் மிகவும் அழிந்து போகும் பண்டமாகும். இது 5 டிகிரி செல்சியஸின் சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படாவிட்டால், அது விரைவில் கெட்டுப்போகிறது. இதைத் தவிர்க்கவும், மீனின் அடுக்கு ஆயுளை அதிகரிக்கவும், விற்பனையாளர்கள் இப்போது ஃபார்மலின் மற்றும் அம்மோனியா போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

விற்பனை செய்யும் இடம் பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தால், ஃபார்மலின் ஒரு பாதுகாப்பாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில், மீன்களை புதியதாக வைத்திருக்க தண்ணீரில் அம்மோனியா கலக்கப்படுகிறது. உணவுப்பொருட்களில் இருக்கும் பார்மலினை எப்படி வெளியேற்றலாம் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.4 1583476917j

மீன்களில் இருந்து பார்மலினை எப்படி வெளியேற்றுவது?

மீனில் இருந்து பார்மலினை வெளியேற்ற அதனை குளிர்ந்த நீரில் குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். இந்த வழியில் மீனை சுத்தம் செய்வது மீனில் இருந்து 61 சதவீதம் பார்மலினை வெளியேற்றுகிறது. இதைவிட சிறந்த வழி மீனை சமைப்பதற்கு முன் 1 மணி நேரம் உப்புநீரில் ஊறவைக்க வேண்டும். இது மீனில் இருக்கும் பார்மலினை 90 சதவீதம் வெளியேற்றுகிறது.

அரிசி கழுவிய நீர்?

அரிசி கழுவிய நீரில் மீனைக் கழுவுவது அதிலிருக்கும் பார்மலினை வெளியேற்றும் சிறந்த முறையாகும். மீனில் இருக்கும் 70 சதவீத பார்மலின் இந்த முறையில் வெளியேற்றப்படுகிறது.

பழங்களில் இருந்து எப்படி வெளியேற்றுவது?

பார்மலின் மீனில் மட்டும் கலக்கப்படுவதில்லை, பழங்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றிலும் கலக்கப்படுகிறது. எந்தவொரு பழத்தையும் சாப்பிடுவதற்கு முன்பு அதை உப்பு கலந்த லேசான வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதன் விளைவாக, கிட்டத்தட்ட 98% ஃபார்மலின் வெளியேற்றப்படுகிறது.2 1583476901f

பழங்களில் எப்படி கலக்கப்படுகிறது?

பெரும்பாலும் பழங்களில் ஸ்ப்ரே மூலம் பார்மலின் கலக்கப்படுகிறது. மாம்பழம் மற்றும் லிச்சி போன்ற பழங்களில்தான் பார்மலின் அதிகம் கலக்கப்படுகிறது. இந்த வகையான பழங்களை வாங்கும்போது அதிக பிரகாசமாக இருக்கும் பழங்களை தவிர்க்கவும்.

வினிகர்

பழங்கள் மற்றும் உணவுப்பொருட்களில் இருக்கும் பார்மலினை வெளியேற்றும் ஒரு சிறந்த பொருள் வினிகர் ஆகும். முதலில், ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கப் வினிகரை கலக்கவும். காய்கறிகள், பழங்கள் அல்லது மீன்களை வினிகர் கலந்த நீரில் 15- 20 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் சாதாரண தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். உணவு மற்றும் உணவுப் பொருட்களிலிருந்து சுமார் 98% ஃபார்மலின் இந்த முறையில் அகற்றப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button