ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே உஷார்!பெண்கள் இறைச்சி அதிகம் சாப்பிடக்கூடாது ஏன்னு தெரியுமா?

இறைச்சியில் அதிகம் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளன. ருசிக்காக அதிக அளவில் எண்ணெய், காரம் சேர்த்து சமைக்கப்படுவதால் கலோரியின் அளவை இறைச்சி உணவு அதிகரிக்கச் செய்து விடும்.

பெண்கள் இறைச்சி ஏன் அதிகம் சாப்பிடக்கூடாது
  • பெண்கள் அதிகளவில் இறைச்சி சாப்பிட்டால் பெண்களுக்கு இதயநோய் வர முக்கியமான இவை இருக்கின்றது.
  • இதனால் பெண்களுக்கு இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. எனவே, பெண்கள் இறைச்சி உணவை தவித்து, காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
  • இறைச்சி சாப்பிட விரும்புபவர்கள், மாதத்தில் ஒரு முறை ஆட்டு இறைச்சியை 75 முதல் 100 கிராம் வரை, பகல் நேரத்தில் மட்டுமே சாப்பிடுவது நல்லது.
  • ஆட்டு இறைச்சியை விரும்பாதவர்கள், வாரத்தில் ஒருமுறை நாட்டுக் கோழி அல்லது மீன் ஆகியவற்றை 75 முதல் 100 கிராம் வரை மதிய வேளையில் சாப்பிடலாம். இவற்றை இரவில் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும்.
  • நபர் ஒருவருக்கு 15 மில்லி லிற்றர் அளவு எண்ணெய்யே ஒரு நாளைக்கு போதுமானது. எனவே, அதிக எண்ணெய் சேர்த்து சமைக்கப்படும் ஓட்டல் உணவுகளை அறவே தவிர்ப்பது மிகவும் நல்லது.
  • இறைச்சி மட்டுமின்றி பிட்சா, கேக் போன்ற பேக்கரி உணவுப்பொருட்கள் சாப்பிடுவதை பெண்கள் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.
  • அதேபோல் வனஸ்பதி சேர்க்கப்படுவதால் இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றால் உடல் பருமன், இதயநோய் ஆகியவை வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
  • இதயநோயை தவிர்க்க உணவுக் கட்டுப்பாடுடன் உடற்பயிற்சியும் செய்வது நல்லது. தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெற்று இதயநோய் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு விடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button